செய்திகள் :

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் கைது

post image

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற தில்லி காவல் துறை உதவி ஆய்வாளர் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

கைதான உதவி ஆய்வாளர் கரம்வீர் சிங், துவாரகாவில் உள்ள தில்லி காவல் துறை சிறப்பு பிரிவின் உளவு பிரிவில் கடந்த 2019 முதல் பணியாற்றி வருகிறார். பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் பிரிவு 35(3)-இன் பதிவுசெய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்காக விஷ்ணு பிஷ்னோய் என்பவரது வங்கி கணக்கு மற்றும் பிற கணக்குகள் முடக்கப்பட்டன.இந்நிலையில், அவற்றை விடுவிக்க ரூ.5 லட்சம் லஞ்சம் விஷ்ணுவிடம் தருமாறு உதவி ஆய்வாளர் சிங் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது வழக்குரைஞருடன் காவல் துறையை அணுகிய விஷ்ணு, உதவி ஆய்வாளருக்கு எதிராகப் புகாரளித்தார்.

முதல்கட்டமாக ரூ.2 லட்சத்துடன் வந்து துவாரகா செக்டார்-14 மெட்ரோ நிலையத்தில் தன்னை செவ்வாய்க்கிழமை சந்திக்குமாறு விஷ்ணுவிடம் சிங் தெரிவித்துள்ளார். தனது சொந்தக் காரில் அங்கு வந்த சிங், விஷ்ணுவை காருக்குள் ஏறுமாறு தெரிவித்தார். லஞ்சத்தை பெற்றுக் கொண்ட பிறகு விஷ்ணுவை காரிலிருந்து இறக்கிவிட்ட சிங், பின்னர் அங்கிருந்து சென்றார். அவருடைய வாகனத்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் 2 கி.மீ. தூரத்துக்கு பின்தொடர்ந்து சென்று, வாகனத்தை இடைமறித்தனர். அப்போது, வாகனத்தை நிறுத்திய சிங், அங்கிருந்து தப்பிக்க முயன்றார். அவரைப் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவருடைய காரிலிருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் கைப்பற்றப்பட்டது.

இந்தச் சம்பவம் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் நிலையத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உ.பி.யில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை:3 பேர் கைது

தில்லி காவல்துறை மாநிலங்களுக்கு இடையேயான சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கடத்தலை முறியடித்து, உத்தர பிரதேசம் மொரதாபாதில் ஒரு ஆயுத உற்பத்திப் பிரிவையும் கண்டுபிடித்ததாக அதிகாரி ஒருவர் தெரிவி... மேலும் பார்க்க

சுபாஷ் பிளேஸ் கொள்ளை சம்பவம்: முக்கிய நபர் கைது

தில்லி சுபாஷ் பிளேஸ் பகுதியில் உள்ள நகைக் கடையில் விற்பனையாளரைக் கத்தியால் குத்தி ரூ.50 லட்சம் மதிப்புடைய நகைகளைக் கொள்ளையடித்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரை தில்லி காவல் துறையின் சிறப்புப் பிர... மேலும் பார்க்க

நவராத்திரி ஊர்வலத்தில் கத்திக் குத்து சம்பவம்: சிறுவன் உள்பட இருவர் கைது

மத்திய தில்லியில் நடைபெற்ற நவராத்திரி ஊர்வலத்தின்போது இரு குழுக்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது ச... மேலும் பார்க்க

காவலர் மீது துப்பாக்கிச் சூடு : சிறுவன் கைது

வடகிழக்கு தில்லியின் நந்த் நகரியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸôர் மீது துப்பாக்கியால் சுட்ட 16 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வரு... மேலும் பார்க்க

தில்லி பல்கலை.யில் கூடுதல் சுற்று: மாணவர் சேர்க்கை தொடக்கம்

தில்லி பல்கலைக்கழகம் இளங்கலைப் படிப்புகளுக்கான நேரடி கூடுதல் சுற்று (மாப்-அப்) மாணவர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது.முதல் நாளில் 73 பிஏ ஹானர்ஸ் இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர... மேலும் பார்க்க

ஓக்லா கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செப்.30-இல் திறப்பு: ஆசியாவில் மிகப் பெரியது

ஓக்லாவில் புதிதாகக் கட்டப்பட்ட 12.4 கோடி காலன் கொள்ளவு கழிவு நீரை சுத்திகரிக்கும் திறன்கொண்ட நிலையத்தின் திறப்பு விழா செப்.30-ஆம் தேதி நடைபெறுகிறது. இதைச் சிறப்பாக நடத்தும் பணியில் தில்லி ஜல் போர்டு த... மேலும் பார்க்க