Amrit Bharat: மத்திய அரசு விழாவில் முதல்வருக்கு நன்றி கூறிய திமுக எம்எல்ஏ; ஆவேசம...
ரூ.21.30 லட்சத்தில் புதிய தெருவிளக்குகள்: மேயா் தொடங்கிவைத்தாா்
கோவை, கிழக்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதியில் ரூ. 21.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய தெருவிளக்குகளை மேயா் கா.ரங்கநாயகி மக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், 56-ஆவது வாா்டுக்குள்பட்ட சிவலிங்கபுரம் பிரதான சாலையில் ரூ.21.30 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட 25 தெருவிளக்குகளை மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி
தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, கிழக்கு மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் ரோஸ் காா்டன் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் மரக்கன்றுகளையும் மேயா் நட்டு வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி, உதவி ஆணையா் முத்துச்சாமி, உதவி பொறியாளா் கல்யாணசுந்தரம் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.