செய்திகள் :

ரூ.24 லட்சம் போதைப் பொருள் பறிமுதல்! ஜெர்மானியர் கைது!

post image

கோவா மாநிலத்தின் வடக்கு கோவா மாவட்டத்தில் ரூ.24 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்களை வைத்திருந்த ஜெர்மன் நாட்டு நபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு கோவாவில் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் சுற்றுலா விசா மூலம் இந்தியாவில் தங்கியிருந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த செபாஸ்தியன் ஹெஸ்லர் (வயது 45) என்ற நபர் தங்கியிருந்த வாடகை குடியிருப்பில் நேற்று (பிப்.3) இரவு காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது, அவரிடமிருந்து எல்.எஸ்.டி, 2 கிலோ அளவிலான கஞ்சா, கெட்டமைன் பவுடர், கெட்டமைன் லிக்விட் ஆகிய போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையும் படிக்க: தந்தையின் இறுதி சடங்கில் மோதல்! சடலத்தை இரண்டாக பிரிக்கக் கோரிய மூத்த மகன்!

இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு சுமார் ரூ.23,95,000 எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மாதம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அக்னி சென்குப்தா என்ற நபர் ரூ.7.5 லட்சம் அளவிலான போதைப் பொருளை கடத்தியதாக கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கடந்த ஒரு வாரக்காலமாக செபாஸ்தியனை காவல் துறையினர் பின் தொடர்ந்து, தற்போது கைது செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் 3 வீரர்கள் படுகாயம்!

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படை வீரர்கள் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பிஜப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதி... மேலும் பார்க்க

அமெரிக்க கைதிகளை சிறையில் அடைக்க முன்வரும் எல் சால்வடார்!

அமெரிக்க கைதிகளை குறைந்த கட்டணத்திற்கு தங்களது நாட்டு சிறைச்சாலைகளில் அடைத்துக்கொள்ளும் திட்டத்தை எல் சல்வடார் அரசு முன்வந்துள்ளது.அமெரிக்க அரசின் செயலாளர் மார்க்கோ ரூபியோ அரசுமுறைப் பயணமாக லத்தீன் அம... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் பதுங்கு குழிகள் வெடி வைத்து தகர்ப்பு!

பாகிஸ்தானின் குர்ராம் மாவட்டத்தில் மோதல்காரர்களின் 30க்கும் மேற்பட்ட பதுங்கு குழிகள் அதிகாரிகளால் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.வடமேற்கு பாகிஸ்தானின் குர்ராம் மாவட்டத்தில் தொடர் மோதல்களிலும் தாக்குதல்கள... மேலும் பார்க்க

மெட்ரோ பணிகள்: மாதவரம் எம்.எம். காலனியை காலி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக மாதவரம் எம்.எம். காலனியை காலி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்காக மாதவரம் பால் பண்ணை அருகே உள்ள எம்.எம். காலனியை 4 மாதங... மேலும் பார்க்க

சங்கத்தமிழ் நாள்காட்டியினை வெளியிட்ட முதல்வர்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப். 4) தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் ... மேலும் பார்க்க

பெற்றோர் வீட்டில் சங்கிலியால் கட்டி சிறை வைக்கப்பட்டிருந்த இளம்பெண் மீட்பு!

மகாராஷ்டிரத்தின் ஜால்னா மாவட்டத்தில் பெற்றோர் வீட்டில் 2 மாதங்களாக சங்கிலியால் கட்டப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த பெண் காவல் துறையினரால் மீட்கப்பட்டார்.ஜால்னாவின் ஆலப்பூர் கிராமத்தில், ஷேனாஸ் (எ) சோனா... மேலும் பார்க்க