செய்திகள் :

ரஞ்சி டிராபி: காலிறுதிக்கான மும்பை அணியில் சூர்யகுமார், துபேவுக்கு இடம்!

post image

ரஞ்சி டிராபி காலிறுதிக்கான மும்பை அணியில் சூர்யகுமார், ஷிவம் துபே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

2024-25 ரஞ்சி டிராபி தொடருக்கான மும்பை - ஹரியாணா அணிகள் மோதும் காலிறுதிப் போட்டி வருகிற பிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான 18 பேர் கொண்ட மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும் ஆல் ரவுண்டருமான ஷிவம் துபேவும் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிவந்த ஷிவம் துபே மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இந்தாண்டுக்கான ரஞ்சி டிராபியில் இதுவரை ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் விளையாடியுள்ளனர். இவர்களைத் தவிர்த்து 4 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்ஷ் டன்னாவுக்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் | சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல இந்திய அணி செய்ய வேண்டியதென்ன? ரெய்னா பேட்டி!

மேகாலயாவுக்கு எதிரான போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 456 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மும்பை அணி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

42 முறை ரஞ்சி டிராபி சாம்பியனான மும்பை அணி ரோஹ்தக்கில் உள்ள சௌதரி பன்சி லால் கிரிக்கெட் மைதானத்தில் ஹரியாணா அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.

மும்பை அணி விவரம்: அஜிங்கியா ரகானே(கேப்டன்), ஆயுஷ் மாத்ரே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, அமோக் பட்கல், சூர்யகுமார் யாதவ், சித்தேஷ் லாட், ஷிவம் துபே, ஆகாஷ் ஆனந்த், ஹார்திக் தாமோர், சூர்யான்ஷ், ஷர்துல் தாக்குர், ஷாம்ஸ் முலானி, தனுஷ் கோடியான், மோஹித் அவஸ்தி, சில்வெஸ்டர் டிசோவ்சா, ராய்ஸ்டன், அதர்வா, ஹர்சத் டன்னா.

இதையும் படியுங்கள் |அபிஷேக் சர்மா இன்னும் அதிகமாக பந்துவீச வேண்டும்; முன்னாள் இந்திய வீரர் வலியுறுத்தல்!

ஒரு டெஸ்ட் தொடர் இழப்பு ஒட்டுமொத்த அணியின் ஃபார்மை தீர்மானிக்காது: ஷுப்மன் கில்

ஒரு டெஸ்ட் தொடரை இழந்தது ஒட்டுமொத்த அணியின் ஃபார்மினை தீர்மானிக்காது என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெ... மேலும் பார்க்க

சஞ்சு சாம்சன் இப்படியே தொடர்ந்து ஆட்டமிழந்தால்... அஸ்வின் கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடியது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் அண்மை... மேலும் பார்க்க

பும்ராவின் கொடுங்கனவு, 10 வீரர்களுடன் வென்ற ஆஸி..! கலகலப்பாக பேசிய மார்ஷ்!

ஆலன் பார்டர் விருது விழாவில் பங்கேற்ற ஆஸி. வீரர் மிட்செல் மார்ஷ் பேசியது வைரலாகி வருகிறது. 2025ஆம் ஆண்டுக்கான ஆலன் பார்டர் விருது டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது. ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரராக ட... மேலும் பார்க்க

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வருண் சக்ரவர்த்தி!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி இடம்பெற்றுள்ளார்.இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 தொடர் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

இலங்கை தொடரில் விளையாடாமல் தாயகம் திரும்பும் சாம் கான்ஸ்டாஸ்; காரணம் என்ன?

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் ஆஸ்திரேலிய இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் தாயகம் திரும்புகிறார்.ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில... மேலும் பார்க்க

100-வது போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் இலங்கை வீரர்!

இலங்கை அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான திமுத் கருணாரத்னே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.36 வயதாகும் திமுத் கருணாரத்னே இலங்கை அணிக்காக இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளை... மேலும் பார்க்க