செய்திகள் :

சஞ்சு சாம்சன் இப்படியே தொடர்ந்து ஆட்டமிழந்தால்... அஸ்வின் கூறுவதென்ன?

post image

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடியது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் அண்மையில் நிறைவடைந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. டி20 தொடரை இந்திய அணி வென்ற போதிலும், சஞ்சு சாம்சனுக்கு இந்த டி20 தொடர் சிறப்பானதாக அமையவில்லை.

இதையும் படிக்க: இலங்கை தொடரில் விளையாடாமல் தாயகம் திரும்பும் சாம் கான்ஸ்டாஸ்; காரணம் என்ன?

கடந்த ஆண்டு அதிரடியாக விளையாடி சதங்கள் விளாசிய சஞ்சு சாம்சன், இங்கிலாந்துக்கு எதிராக பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய சஞ்சு சாம்சன், வெறும் 51 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இப்படியே தொடர்ந்து ஆட்டமிழந்தால்...

இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக ஒரே மாதியான ஷாட்டினை தேர்வு செய்து சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். இப்படியே தொடர்ச்சியாக ஆட்டமிழந்தால், அவரது மனமே அவரை குழப்பும் விதமாக செயல்படும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின் (கோப்புப் படம்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆட்டமிழந்தது போன்று தொடர்ச்சியாக சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தால், அவரது மனமே அவரை குழப்பும் விதமாக செயல்படும். பந்துவீச்சாளர் குறிப்பிட்ட விதத்தில் பந்துவீசுகிறார். அவர் வீசும் ஒரே மாதிரியான பந்தில் நான் தொடர்ந்து ஆட்டமிழக்கிறேன். நான் ஏன் அவ்வாறு ஆட்டமிழக்கிறேன்.

இதையும் படிக்க: 100-வது போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் இலங்கை வீரர்!

பந்துவீச்சாளர் நன்றாக பந்துவீசுகிறாரா அல்லது என்னுடைய பேட்டிங்கில் குறை உள்ளதா? இது போன்ற பந்துவீச்சுக்கு ஏற்றவாறு என்னுடைய ஆட்டத்தை மாற்றிக் கொள்ள முடியுமா? இது போன்ற பல கேள்விகள் எழும். ஒரு முறை இது போன்று பல கேள்விகள் உருவாகிவிட்டால், நாம் நன்றாக விளையாடுவதை அது கடினமாக்கிவிடும் என்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியின்போது, சஞ்சு சாம்சனுக்கு கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அடுத்த ஒரு மாதத்துக்கு அவரால் கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜாக்ஸ் காலிஸ்தான் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட்டர்..! ரிக்கி பாண்டிங் புகழாரம்!

தி ஹைவி கேம்ஸ் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரிக்கி பாண்டிங் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக்ஸ் காலிஸ்தான் உலகின் மிகச் சிறந்த கிரிக்கெட்டரென புகழ்ந்து பேசியுள்ளார்.இந்தியாவின் நட்சத... மேலும் பார்க்க

ஒருநாள் தொடர்: முதல் இரண்டு போட்டிகளை தவறவிடும் இங்கிலாந்து வீரர்!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளை இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் தவறவிட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில... மேலும் பார்க்க

ஒரு டெஸ்ட் தொடர் இழப்பு ஒட்டுமொத்த அணியின் ஃபார்மை தீர்மானிக்காது: ஷுப்மன் கில்

ஒரு டெஸ்ட் தொடரை இழந்தது ஒட்டுமொத்த அணியின் ஃபார்மினை தீர்மானிக்காது என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெ... மேலும் பார்க்க

பும்ராவின் கொடுங்கனவு, 10 வீரர்களுடன் வென்ற ஆஸி..! கலகலப்பாக பேசிய மார்ஷ்!

ஆலன் பார்டர் விருது விழாவில் பங்கேற்ற ஆஸி. வீரர் மிட்செல் மார்ஷ் பேசியது வைரலாகி வருகிறது. 2025ஆம் ஆண்டுக்கான ஆலன் பார்டர் விருது டிராவிஸ் ஹெட்டுக்கு வழங்கப்பட்டது. ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரராக ட... மேலும் பார்க்க

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வருண் சக்ரவர்த்தி!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி இடம்பெற்றுள்ளார்.இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய டி20 தொடர் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

இலங்கை தொடரில் விளையாடாமல் தாயகம் திரும்பும் சாம் கான்ஸ்டாஸ்; காரணம் என்ன?

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் ஆஸ்திரேலிய இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் தாயகம் திரும்புகிறார்.ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில... மேலும் பார்க்க