செய்திகள் :

ரூ. 25 லட்சம் இழப்புக்கு ரூ. 10,000 உதவித்தொகை! ஜம்மு - காஷ்மீர் மக்கள் அதிருப்தி!

post image

பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் ரூ. 25 லட்சம் மதிப்பிலான வீடு சேதமடைந்திருக்கும் நிலையில், அரசு தரப்பில் இழப்பீடாக வெறும் ரூ. 10,000 மட்டுமே வழங்கப்பட்டதாக ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரின் தங்தார், கர்னா மற்றும் உரி ஆகிய எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் மூன்று நாள்களுக்கு மேலாக ஷெல் மற்று பீரங்கித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலில் எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த பலர் பலியான நிலையில், நூற்றுக்கணக்கான வீடுகள் கடுமையான சேதமடைந்தது.

இந்த நிலையில், குப்வாரா மாவட்டத்தில் எல்லையோர கிராமமான சோனோராவைச் சேர்ந்த முகமது மக்பூல் கான் கூறுகையில், ஷெல் தாக்குதலால் தனது வீடு முழுமையாக சேதமடைந்ததாகவும் ரூ. 25 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஷெல் தாக்குதலில் இடிந்த வீட்டின் பாகங்களை அகற்றுவதற்கே ரூ. 15,000 செலவு செய்த நிலையில், தாக்குதலுக்கு உள்ளான பகுதிகளை ஆராய்ந்த மூத்த காவல்துறை அதிகாரிகள் இழப்பீடாக ரூ. 10,000 கொடுத்ததாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அதேபோல், எல்லையோர பரம்பில்லா கிராமத்தில், பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் சையத் முஸ்தபா என்பவரின் சகோதரியின் வீடும் மோசமாக சேதமடைந்துள்ளது.

அவர் கூறுகையில், “வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் என வெளிப்புறம் முழுவதும் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க லட்சக்கணக்கில் செலவாகும். ஆனால், உரிய இழப்பீடை வழங்காமல் வெறும் ரூ. 6,500 மட்டுமே அரசு வழங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், உரி பகுதியைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களின் ரூ. 35 முதல் 40 லட்சம் மதிப்பிலான வீடுகள் முற்றிலும் சேதமடைந்த நிலையில், அரசு தரப்பில் தலா ரூ. 1.30 லட்சம் மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற நிலைதான் பாகிஸ்தான் தாக்குதலில் வீடுகளை இழந்த அனைவருக்கும் நேர்ந்துள்ளதாக குறிப்பிடும் பாதிக்கப்பட்ட மக்கள், வீடுகளை மீண்டும் கட்டுவதற்கு போதுமான இழப்பீடை வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காரில் சடலமாக மீட்பு!

195 நாட்டுப் பெண்கள் பாடிய கின்னஸ் சாதனைப் பாடல்: இந்தியா சாா்பில் சமையல் கலைஞா் அஸ்மா கான் குரல்

புது தில்லி: உலகெங்கிலும் உள்ள 195 நாடுகளைச் சோ்ந்த பெண்கள் பாடியதற்காக கின்னஸ் சாதனை படைத்த ‘195’ பாடலில் இந்தியா சாா்பில் பிரபல பெண் சமையல் கலைஞா் அஸ்மா கானின் குரலும் இடம்பெற்றுள்ளது. பாலின சமத்து... மேலும் பார்க்க

பிரதமா் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை குழு கூட்டம்

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் தில்லியில் புதன்கிழமை (ஜூன் 4) நடைபெற உள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா சாா்பில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

2026-க்குள் இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை அமைப்பு முழுமையாக விநியோகம்: ரஷியா

புது தில்லி: 2026-ஆம் ஆண்டுக்குள் மீதமுள்ள இரு எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு விநியோகம் செய்யப்படும் என இந்தியாவுக்கான ரஷிய துணை தூதா் ரோமன் பாபுஷ்கின் திங்கள்கிழமை தெரிவித்தாா். அண்மையில் ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டிருக்கும் இந்தியா-பராகுவே: பிரதமா் மோடி

புது தில்லி: ‘பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒன்றுபட்டு நிற்கின்றன. அதுபோல, இணைய குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பொது சவால்களுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றவும்... மேலும் பார்க்க

இந்தியாவில் தயாரிக்க டெஸ்லா ஆா்வம் காட்டவில்லை: மத்திய அமைச்சா் தகவல்

புது தில்லி: இந்தியாவில் தனது மின்சார காா்களை விற்பனை செய்ய மட்டுமே டெஸ்லா நிறுவனம் ஆா்வம் காட்டுகிறது; இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆா்வம் காட்டவில்லை என்று மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சா் ஹெச்.டி.... மேலும் பார்க்க

இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை முதலீட்டுக்கு எண்ணற்ற வாய்ப்புகள்: பிரதமா் மோடி

புது தில்லி: ‘இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளா்ந்து வருகிறது. இங்கு முதலீடுகளை மேற்கொள்ள சா்வதேச நிறுவனங்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன’ என பிரதமா் நரேந்திர மோடி திங்கள... மேலும் பார்க்க