செய்திகள் :

ரூ.25 லட்சம் பண மோசடி: சக வீராங்கனை மீது தீப்தி சர்மா புகார்!

post image

யுபி வாரியர்ஸ் அணி வீராங்கனை ஆருஷி கோயல் ரூ.25 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக, அணியின் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வீராங்கனையுமான தீப்தி சர்மா பரபரப்பு புகாரளித்துள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த மகளிர் பிரீமியர் லீக்கில், தீப்தி சர்மா யுபி வாரியர்ஸ் அணியை வழிநடத்தினார். இந்தத் தொடரில் தீப்தி சர்மா 122 ரன்கள் மற்றும் எட்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இருப்பினும், 8 போட்டிகளில் விளையாடிய அவரது அணி 3 போட்டிகளில் மட்டும் வெற்றிபெற்று கடைசி இடத்தைப் பிடித்தது.

இந்த நிலையில், தீப்தி சர்மா தற்போது தனது சக வீராங்கனை மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தீப்தி சர்மாவிடம் ஆருஷி கோயல் ரூ.25 லட்சத்திற்கும் அதிகமாக மோசடி செய்ததாகவும், ஆக்ராவில் உள்ள தனது வீட்டில் இருந்து அருஷி கோயல் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பணம், நகைகள் மற்றும் வெளிநாட்டு பணத்தை திருடியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆக்ரா பிரிவில் இந்திய ரயில்வேயில் ஜூனியர் எழுத்தராக பணிபுரியும் அருஷி கோயல் உ.பி. வாரியர்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாடி வருகின்றனர். மேலும், ஆக்ரா கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்திலும் வேலை பார்த்து வருகிறார்.

ஆக்ராவில் உள்ள சதார் காவல் நிலையத்தில் தீப்தி சர்மாவின் சகோதரர் சுமித் சர்மா முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்தப் புகாரில் அருஷி கோயல் மீது திருட்டு, வீடு புகுந்து திருடுதல், நம்பிக்கை மோசடி மற்றும் அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டை அருஷி கோயல் முழுமையாக மறுத்துள்ளார்.

இதையும் படிக்க: இங்கிலாந்துக்கு எதிரான அனைத்துப் போட்டிகளிலும் பும்ரா விளையாட மாட்டார்: அஜித் அகர்கர்

பெங்களூரு: கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழப்பு? மருத்துவர்கள் மறுப்பு!

பெங்களூரில் கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழந்ததாகப் பரவிய வதந்திக்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.பெங்களூரில் 84 வயதான முதியவர் ஒருவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மே 13 ஆம் தேதியில் தனியா... மேலும் பார்க்க

தில்லியில் கனமழை! 100 விமான சேவைகள் பாதிப்பு!

தில்லியில் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.தில்லியில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தில்லியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பு: நாடாளுமன்றக் குழுவின் ரஷிய பயணம் நிறைவு

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ரஷிய அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையை மேற்கொண்டதையடுத்து, திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி உறுப்பினா்களைக் கொண்ட ந... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை: பாதுகாப்புப் படைகள், பிரதமருக்கு பாராட்டு

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த முதல்வா்கள் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை ஒருமனதாக பாராட்டியதாகவும், ஆயுதப் படைகள் மற்றும் பிரதமா் நரேந்திர மோடியை வாழ்த்தியதாகவும் தில்லி ம... மேலும் பார்க்க

நீதி ஆயோக் ‘தகுதியற்ற அமைப்பு’: காங்கிரஸ்

நீதி ஆயோக் என்பது தகுதியற்ற அமைப்பாகும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை சாடினாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: வளா்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்க... மேலும் பார்க்க

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடு இந்தியா: நீதி ஆயோக் சிஇஓ

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயா்ந்துள்ளது என்று நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) வி.ஆா்.சுப்பிரமணியம் தெரிவித்தாா். புது தில்லியில் நீதி ... மேலும் பார்க்க