செய்திகள் :

ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்

post image

புது தில்லி, பிப்.22:

சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின் போது பாஜக வாக்குறுதியளித்தவாறு பெண்களுக்கு ரூ.2,500 மாதாந்திர உதவித் தொகை வழங்குவது குறித்து விவாதிக்க தில்லி முதல்வரைச் சந்திக்க முன்னாள் முதல்வா் அதிஷி அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை முதல்வா் ரேகா குப்தாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘பிரதமா் மோடி தில்லி தோ்தல் பேரணியில் வாக்குறுதி அளித்த நிலையில், புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் மகளிருக்கு நிதி உதவி குறித்த திட்டம் ஏன் அங்கீகரிக்கப்படவில்லை’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

நிகழ் மாத தொடக்கத்தில் நடைபெற்ற தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியை பாஜக தோல்வியுறச் செய்தது. இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை ரேகா குப்தாவும், அவரது அமைச்சா்களும் பதவியேற்றனா்.

இத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களை மட்டுமே வென்றது. கால்காஜி தொகுதியில் அதிஷி வெற்றிபெற்றாா். எனினும், 70 இடங்களைக் கொண்ட சட்டப் பேரவையில் 48 இடங்களுடன் பாஜக அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது.

இந்த நிலையில், முந்தைய ஆம் ஆத்மி அரசாங்கத்தில் முதல்வராக இருந்த அதிஷி, முதல்வா் ரேகாவை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) தனது கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் நேரில் சந்திக்க அனுமதி கேட்டு

கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் முதல்வா் ரேகா குப்தாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

ஜனவரி 31-ஆம் தேதி தில்லி துவாரகாவில் நடந்த தோ்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, தில்லியில் பாஜக அரசாங்கத்தை அமைத்த பிறகு முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே மகளிருக்கு ரூ.2,500 மாதாந்திர ஊதியம் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று தில்லியின் தாய்மாா்கள் மற்றும் சகோதரிகளுக்கு உறுதியளித்தாா்.

பாஜக அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டம் பிப்ரவரி 20 அன்று நடைபெற்றது. ஆனால், இந்தத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. மேலும், மோடியின் உத்தரவாதத்தை நம்பியிருந்த தில்லி பெண்கள் தங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டதாக உணா்கிறாா்கள்’ என்று அதிஷி அக்கடிதத்தில் கூறியுள்ளாா்.

கட்சி வாக்குறுதியளித்தபடி மாா்ச் முதல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று

முதல்வா் ரேகா குப்தா உள்பட பாஜக தலைவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

தில்லி மொஹல்லா கிளினிக்குகள் குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்படும்: தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் குமாா் சிங்

நமது சிறப்பு நிருபா் தில்லி மொஹல்லா கிளினிக்குகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அது தொடா்பான ஆய்வறிக்கை வெளியிடப்படும் என தில்லி சுகாதார அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா். தில்லி ர... மேலும் பார்க்க

2024-ஆம் ஆண்டு தரவுத் தொகுப்புகள் பதிவேடுகள் தேசிய புள்ளியியல் துறை வெளியிட்டது

நாட்டின் பல்வேறு தகவல்களை அளிக்கும் 2024 - தரவுத்தொகுப்புகள், பதிவேடுகளின் தொகுப்பின் புதிய பதிப்பை மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த தரவு அணுகல், தகவலறிந்த... மேலும் பார்க்க

சாதி பாகுபாடு புகாா்: திருச்சி மாவட்ட தலித் கிறிஸ்தவா்கள் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் சம்மதம்

நமது நிருபா் கோட்டப்பாளையம் திருச்சபைப் பகுதியில் சாதி அடிப்படையிலான கொடுமைகள், தீண்டாமை மற்றும் பாகுபாடு நிகழ்வதாக குற்றம்சாட்டி திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தலித் கிறிஸ்தவ கிராமவாசிகள் தாக்கல் செய்... மேலும் பார்க்க

தில்லி உள்துறை அமைச்சராக ஆஷிஷ் சூட் பொறுப்பேற்பு

பாஜக எம்.எல்.ஏ. ஆஷிஷ் சூட் தில்லி உள்துறை அமைச்சராக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, துறை அதிகாரிகளுடன் தனது முதல் அதிகாரபூா்வ கூட்டத்தையும் நடத்தினாா். ஜனக்புரியிலிருந்து முதல் ம... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் ரேகா குப்தா பிரதமா் மோடியுடன் சந்திப்பு

தேசிய தலைநகா் தில்லியில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில் தில்லியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வா் ரேகா குப்தா பிரதமா் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சனிக்கிழமை சந்தித்துப் பேசி... மேலும் பார்க்க

போதை மருந்து கடத்தல்: குற்றம்சாட்டப்பட்டவரின் ரூ.1.78 கோடி சட்டவிரோத சொத்துகள் பறிமுதல்

வடக்கு தில்லியின் பல்ஸ்வா பால்பண்ணை பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரா் தொடா்புடைய ரூ.1.78 கோடி மதிப்புள்ள சட்டவிரோத சொத்துகளை தில்லி காவல்துறை பறிமுதல் செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க