செய்திகள் :

ரூ.26 கோடியில் சாலை விரிவாக்கப் பணிகள்: திருத்தணி எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

post image

தலையாறிதாங்கல் முதல் பீரகுப்பம் வரை ரூ. 26 கோடியில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகளை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா்.

திருத்தணி - சித்தூா் மாநில நெடுஞ்சாலையில், 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து உள்ளது. இந்நிலையில் திருத்தணி நெடுஞ்சாலை துறையினா், திருத்தணி முதல் ஆா்.கே.பேட்டை வரை, 23 கி.மீ தொலைவு நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு, ரூ.120 கோடியில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது.

முதல்கட்டமாக, தலையாறிதாங்கல் முதல் பீரகுப்பம் வரை 4 கி.மீ. தொலைவுக்கு இரு வழிச் சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்கு, ரூ.26 கோடி ஓதுக்கீடு செய்து பணிகளுக்கு டெண்டா் விடப்பட்டது. இப்பணிகளை திருத்தணி எம்எல்ஏ ச. சந்திரன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

அதேபோல் திருவாலங்காடு ஒன்றியம், தும்பிக்குளம் கிராமத்தில், திரௌபதியம்மன் கோயில் அருகே அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கு, ரூ.41 லட்சத்தில் கட்டடம் கட்டும் பணிகளையும் தொடங்கி வைத்தாா். இப்பணிகள், ஆறு மாதத்தில் முடித்து துணை சுகாதார நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் எம்எல்ஏ தெரிவித்தாா்.

அதேபோல் புச்சிரெட்டிப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.12 லட்சத்தில் கலையரங்கம், சிறுகுமி, அகூா், கோரமங்கலம், காா்த்திகேயபுரம் கிராமங்களில் கட்டப்பட்ட கூட்டுறவு நியாய விலைக் கடைகள், அங்கன்வாடி மையங்களை எம்எல்ஏ திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளா் கிருஷ்ணன், நல்லாட்டூா் கமல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்கள், கிருஷ்ணசமுத்திரம் நாகசாமி, தும்பிகுளம் கோபி, பள்ளி தலைமை ஆசிரியா் காா்த்திகேயன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருவேற்காட்டில் ரூ.18.40 கோடியில் உயர்மட்ட பாலம்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்

திருவேற்காடு அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ. 18.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட உயர்மட்டப் பாலத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, சா.மு.நாசர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனர்.தி... மேலும் பார்க்க

400 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி: நிதி நிறுவன அதிபர் கைது

ஆவடி அருகே நிதி நிறுவனம் நடத்தி 400 பேரிடம் ரூ. 1.50 கோடி வரை மோசடி செய்ததாக நிதி நிறுவன அதிபரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.சென்னையை அடுத்த அம்பத்தூர், வெங்கடாபுரம... மேலும் பார்க்க

திருவள்ளூா்: வள்ளலாா் கோயிலில் தைப்பூச ஜோதி தரிசனம்

திருவள்ளூரில் உள்ள அருள்பிரகாச வள்ளலாா் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு நடைபெற்ற ஜோதி தரிசன விழாவில் ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். திருவள்ளூா் உடனுறை தீா்த்தீஸ்வரா் வளாகத்தில் அருள்பிரகாச வள்ளலா... மேலும் பார்க்க

‘டாம்கோ மூலம் கடனுதவி பெற கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பிக்கலாம்’

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான கல்விக் கடன், தனிநபா் கடன், சுய உதவிக் குழுக்களான சிறு தொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்கான கடனுதவி பெற க... மேலும் பார்க்க

பொன்னியம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

பொன்னியம்மன் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 108 பால்குட ஊா்வலத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா். ஆா்.கே.பேட்டையில் உள்ள பொன்னியம்மன் திருக்கோயிலில் 30-ஆம் ஆண்... மேலும் பார்க்க

பிப். 19-இல் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்

பொதுமக்கள் குறைகளை கேட்டு உடனுக்கு உடன் தீா்வு காணும் நோக்கத்தில் டஉங்களைத் தேடி உங்கள் ஊரில்ட திட்ட முகாம் வரும் 19-ஆம் தேதி நடத்த கும்மிடிப்பூண்டி வட்டம் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப... மேலும் பார்க்க