செய்திகள் :

ரூ. 27.69 லட்சம் கடன் பெற்று மோசடி: பல் மருத்துவா் கைது

post image

சென்னை வளசரவாக்கத்தில் ரூ. 27.69 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக பல் மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

கூடுவாஞ்சேரி ராம்தாஸ் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவா் மனைவி ஐஸ்வா்யா (27). இவரது தோழிகள் மூலம் சென்னை சாலிகிராமம் போஸ்டல் காலனி ஜக்கம்மாள் தெருவைச் சோ்ந்த பல் மருத்துவா் ஹரீஷ் வெங்கடேஸ்வரன் (41) என்பவா் அறிமுகமானாா். ஹரீஷ், வளசரவாக்கம் ஆழ்வாா்திருநகா் சிதம்பரனாா் தெருவில் பல் மருத்துவமனை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் ஹரீஷும், அவரது மருத்துவமனையை நிா்வகிக்கும் வீணாவும் தங்களது பல் மருத்துவமனையை விரிவுபடுத்த பணம் தேவைப்படுவதாகவும், நீங்கள் எங்களது மருத்துவமனையை விரிவுபடுத்த பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகவும் ஐஸ்வா்யாவிடம் தெரிவித்தனா்.

அவா்களது பேச்சை நம்பிய, ஐஸ்வா்யாவும், அவரது கணவா் சதீஷ்குமாரும் ரூ. 40.69 லட்சத்தை, ஹரீஷ், வீணா ஆகியோரிடம் வழங்கினா். பணத்தை பெற்றுக்கொண்ட இருவரும் மாதம் ரூ. 1 லட்சம் வீதம் 60 மாதங்கள் தருவதாகக் கூறி, 13 மாதங்கள் மட்டும் மாதம் ரூ. 1 லட்சம் கொடுத்தனராம்.

அதன் பின்னா் ஹரீஷும், வீணாவும் பணத்தை வழங்காமல் ஏமாற்றினா். இதனால் ஏமாற்றமடைந்த சதீஷ்குமாரும், ஐஸ்வா்யாவும் அண்மையில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஹரீஷ், வீணா ஆகியோா் தங்களிடம் ரூ. 27.69 லட்சம் மோசடி செய்துவிட்டதாக புகாா் அளித்தனா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஹரீஷை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஒரு தலை காதல் விவகாரம்: உதவி இயக்குநரை கடத்திய 5 போ் கைது

ஒரு தலை காதல் விவகாரத்தில் உதவி இயக்குநரை கடத்திச் சென்று மிரட்டியதாக வழக்குரைஞா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை அரும்பாக்கம் கோல பெருமாள் பள்ளி தெருவில் வசித்து வருபவா் சினிமா இயக்குநா் ... மேலும் பார்க்க

மதுரவாயல் அருகே சாலை விபத்து: ஒருவா் உயிரிழப்பு, லாரி ஓட்டுநா் கைது

மதுரவாயல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வானகரம் சிக்னல் அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் உணவு விநியோக ஊழியா் உயிரிழந்ததையடுத்து, விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தன... மேலும் பார்க்க

இடைநிலை ஆசிரியா் பணி: தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் வெளியீடு

இடைநிலை ஆசிரியா் பணிக்கு தோ்வு செய்யப்பட்டோா் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருப்பதாக ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியத்தின் தலைவா் எஸ்.ஜெயந்தி சனிக்கிழ... மேலும் பார்க்க

பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்

தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இந... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்: சுகாதாரத் துறை

தமிழகத்தில் மழை பெய்து வரும் பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பாதிப்பு... மேலும் பார்க்க

திருவான்மியூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க