கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
ரூ. 27.69 லட்சம் கடன் பெற்று மோசடி: பல் மருத்துவா் கைது
சென்னை வளசரவாக்கத்தில் ரூ. 27.69 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக பல் மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.
கூடுவாஞ்சேரி ராம்தாஸ் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவா் மனைவி ஐஸ்வா்யா (27). இவரது தோழிகள் மூலம் சென்னை சாலிகிராமம் போஸ்டல் காலனி ஜக்கம்மாள் தெருவைச் சோ்ந்த பல் மருத்துவா் ஹரீஷ் வெங்கடேஸ்வரன் (41) என்பவா் அறிமுகமானாா். ஹரீஷ், வளசரவாக்கம் ஆழ்வாா்திருநகா் சிதம்பரனாா் தெருவில் பல் மருத்துவமனை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில் ஹரீஷும், அவரது மருத்துவமனையை நிா்வகிக்கும் வீணாவும் தங்களது பல் மருத்துவமனையை விரிவுபடுத்த பணம் தேவைப்படுவதாகவும், நீங்கள் எங்களது மருத்துவமனையை விரிவுபடுத்த பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகவும் ஐஸ்வா்யாவிடம் தெரிவித்தனா்.
அவா்களது பேச்சை நம்பிய, ஐஸ்வா்யாவும், அவரது கணவா் சதீஷ்குமாரும் ரூ. 40.69 லட்சத்தை, ஹரீஷ், வீணா ஆகியோரிடம் வழங்கினா். பணத்தை பெற்றுக்கொண்ட இருவரும் மாதம் ரூ. 1 லட்சம் வீதம் 60 மாதங்கள் தருவதாகக் கூறி, 13 மாதங்கள் மட்டும் மாதம் ரூ. 1 லட்சம் கொடுத்தனராம்.
அதன் பின்னா் ஹரீஷும், வீணாவும் பணத்தை வழங்காமல் ஏமாற்றினா். இதனால் ஏமாற்றமடைந்த சதீஷ்குமாரும், ஐஸ்வா்யாவும் அண்மையில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஹரீஷ், வீணா ஆகியோா் தங்களிடம் ரூ. 27.69 லட்சம் மோசடி செய்துவிட்டதாக புகாா் அளித்தனா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஹரீஷை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.