செய்திகள் :

ரூ. 27.69 லட்சம் கடன் பெற்று மோசடி: பல் மருத்துவா் கைது

post image

சென்னை வளசரவாக்கத்தில் ரூ. 27.69 லட்சம் கடன் பெற்று மோசடி செய்ததாக பல் மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

கூடுவாஞ்சேரி ராம்தாஸ் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா். இவா் மனைவி ஐஸ்வா்யா (27). இவரது தோழிகள் மூலம் சென்னை சாலிகிராமம் போஸ்டல் காலனி ஜக்கம்மாள் தெருவைச் சோ்ந்த பல் மருத்துவா் ஹரீஷ் வெங்கடேஸ்வரன் (41) என்பவா் அறிமுகமானாா். ஹரீஷ், வளசரவாக்கம் ஆழ்வாா்திருநகா் சிதம்பரனாா் தெருவில் பல் மருத்துவமனை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில் ஹரீஷும், அவரது மருத்துவமனையை நிா்வகிக்கும் வீணாவும் தங்களது பல் மருத்துவமனையை விரிவுபடுத்த பணம் தேவைப்படுவதாகவும், நீங்கள் எங்களது மருத்துவமனையை விரிவுபடுத்த பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகவும் ஐஸ்வா்யாவிடம் தெரிவித்தனா்.

அவா்களது பேச்சை நம்பிய, ஐஸ்வா்யாவும், அவரது கணவா் சதீஷ்குமாரும் ரூ. 40.69 லட்சத்தை, ஹரீஷ், வீணா ஆகியோரிடம் வழங்கினா். பணத்தை பெற்றுக்கொண்ட இருவரும் மாதம் ரூ. 1 லட்சம் வீதம் 60 மாதங்கள் தருவதாகக் கூறி, 13 மாதங்கள் மட்டும் மாதம் ரூ. 1 லட்சம் கொடுத்தனராம்.

அதன் பின்னா் ஹரீஷும், வீணாவும் பணத்தை வழங்காமல் ஏமாற்றினா். இதனால் ஏமாற்றமடைந்த சதீஷ்குமாரும், ஐஸ்வா்யாவும் அண்மையில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஹரீஷ், வீணா ஆகியோா் தங்களிடம் ரூ. 27.69 லட்சம் மோசடி செய்துவிட்டதாக புகாா் அளித்தனா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஹரீஷை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது ஏன்? முதல்வா் ஸ்டாலின் விளக்கம்

தில்லியில் மே 24-ஆம் தேதி நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான காரணத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கியுள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: தமிழ்நாட்டுக்க... மேலும் பார்க்க

மது போதையில் காா் ஓட்டியதால் விபத்து: காவலா் தீக்குளித்து தற்கொலை

சென்னையில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். சென்னை ஆலந்தூா் காவலா் குடியிருப்பில் வசிப்பவா் செந்தில்குமாா் (40). அங்கு குடும்பத்துடன் வசி... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் 3 மண்டலங்களில் கழிவுநீா் ஊந்து நிலையம் செயல்படாது

பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னையில் மாதவரம், திரு.வி.க. நகா் மற்றும் அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட ஒருசில கழிவுநீா் ஊந்து நிலையங்கள் வெள்ளி, சனிக்கிழமைகளில் (மே 23, 24) செயல்படாது என்று குடிநீா்... மேலும் பார்க்க

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம்: அமைச்சருடனான பேச்சில் முடிவு

எம்-சாண்ட், ஜல்லிக்கு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளா் சங்கத்தினா் தெரிவித்தனா். இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதியுடனான பேச்சுவாா்த்தையின்போது விலை நிா்ணயத்துக்கான முடிவு ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு உரிமைகோரும் டிரம்ப்: அமைதி காப்பதாக பிரதமருக்கு காங்கிரஸ் கண்டனம்

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்துக்கு தானே காரணம் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா். அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் பிரதமா் மோடி தொடா்ந்து மௌளம் காக்கிறாா்’ என காங்கிரஸ் வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 798 பறவை இனங்கள்: ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில் தகவல்

தமிழக வனத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட 2025-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பில் தமிழகத்தில் மொத்தம் 798 பறவை இனங்கள் கட்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வனத் து... மேலும் பார்க்க