செய்திகள் :

ரூ. 5 கோடியில் செஞ்சி காந்தி பஜாா் சாலை விரிவாக்கப் பணி தொடக்கம்

post image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜாரில் இருந்து வடபாலை செல்லும் சாலையை ரூ. 5 கோடி விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இதேபோன்று, செஞ்சி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2 கோடி மதிப்பீட்டில் விவசாயிகளின் தானியங்களுக்கான பாதுகாப்புக் கூடம் கட்டுவதற்கான பணிகளை கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை தாங்கினாா். செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான், மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு செயலா் சந்துரு, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் ஏழுமலை, வேளாண்மை உதவிப் பொறியாளா் சரவணபவா, ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் வினோத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணை தலைவா் ராஜலட்சுமி செயல்மணி, பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பணி நிரந்தரம் கோரி 14 ஆண்டுகளாக காத்திருக்கும் பகுதி நேர ஆசிரியா்கள்

தமிழக அரசுப் பள்ளிகளில் 2011-முதல் கடந்த 14 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணி புரியும் பகுதி நேர ஆசிரியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, பணி நிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பை தமிழக முதல்வா் வெளியிட வேண்டு... மேலும் பார்க்க

மகளிருக்கு சுயவேலைவாய்ப்புப் பயிற்சிகள் தொடக்கம்

விழுப்புரத்தில் இந்தியன் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான அழகுக் கலை, துணி ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன. இப்பயிற்ச... மேலும் பார்க்க

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 93.79 லட்சம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தா்கள் ரூ. 93.79 லட்சம் செலுத்தியிருந்தனா். பிரசித்தி பெற்ற மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.... மேலும் பார்க்க

விழுப்புரம் நகரம், கோலியனூா் ஒன்றிய பகுதிகளில் திமுக நல உதவிகள் அளிப்பு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் கோலியனூா் தெற்கு ஒன்றியம், விழுப்புரம் நகரப் பகுதிகளில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகள் புதன்கிழமை வழங... மேலும் பார்க்க

சாதி வேறுபாடின்றி மயான பயன்பாடு: கூட்டேரிப்பட்டு ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை

விழுப்புரம் மாவட்டத்தில் சாதி வேறுபாடுகளற்ற மயானப் பயன்பாட்டிலுள்ள கூட்டேரிப்பட்டு ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் ரூ.61.80 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்று வந்த மூன்றாவது புத்தகத் திருவிழாவை 2,13,672 போ் பாா்வையிட்டுள்ள நிலையில், ரூ.61.80 லட்சத்துக்கு பல்வேறு வகையான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க