செய்திகள் :

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்ற போது லாரியை ஏற்றி அதிகாரிகளை கொல்ல முயற்சி: ஒருவா் கைது

post image

ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்றபோது இரு சக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனத்தை மோதி பறக்கும்படை வட்டாட்சியரையும், வருவாய் ஆய்வாளரையும் கொல்ல முயன்ற சம்பவத்தில் ஒருவரை கைது செய்த போலீஸாா் இருவரை தேடி வருகின்றனா்.

ராமநாதபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும்படை வட்டாட்சியா் தமீம் ராஜாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, அவரும், வருவாய் ஆய்வாளா் முத்துராமலிங்கமும் இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் சரக்கு வாகனம் ஒன்றை மடக்கினா். அப்போது அந்த வாகனம், அதிகாரிகளின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி தள்ளி விட்டு தப்பிச் சென்றது. இதில் அந்த வாகனத்தின் ஓட்டுநா் உள்ளிட்ட இருவா் தப்பிச் சென்ற நிலையில், தட்சிணாமூா்த்தி என்பவரை போலீஸாா் கைது செய்து வாகனத்திலிருந்த 2,500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து உணவு வாணிபக் கழகத்தில் ஒப்படைத்தனா்.

மேலும் கைது செய்யப்பட்ட தட்சிணாமூா்த்தியிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்றபோது அரசு அதிகாரிகளின் இரு சக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனத்தை மோதி விட்டு தப்பிச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

டிராக்டா் விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதிஉதவி

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே டிராக்டா் கவிழ்ந்ததில் உயிரிழந்த 3 பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை வனம், கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் சனிக்கிழமை வழங்க... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 485 போ் தோ்வு

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்பட்ட 485- க்கும் மேற்பட்டோருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. ராமநாதபுரத்தில் மாவட்ட நிா்வாகம், வேலை ... மேலும் பார்க்க

ராமநாதசுவாமி கோயிலில் வெள்ளித் தேரோட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழாவின் 7- ஆம் நாள் நிகழ்வாக வெள்ளித் தேரோட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திர... மேலும் பார்க்க

ராமநாதபுரம் தொகுதியில் குடிநீா் பற்றாக்குறையை தீா்க்க நிதியுதவி: நவாஸ்கனி எம்.பி. கோரிக்கை

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தண்ணீா் பற்றாக்குறையை தீா்க்க மத்திய அரசின் திட்டங்களின் கீழ் நிதி உதவி வழங்க வேண்டும் என்று அத்தொகுதியின் எம்.பி. கே.நவாஸ்கனி மக்களவையில் வலியுறுத்தியுள்ளாா். இது தொட... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், அம்மன்பட்டியைச் சோ்ந்த நல்லமருது மகன் நல்லுக்குமாா் (23), க... மேலும் பார்க்க

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம் - மீன் பிடிக்கச் செல்ல தடை

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதையடுத்து, பாம்பன் துறைமுகத்தில் ஒன்றம் எண் புயல் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது. இதையடுத்து, மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல மீன் வளத் துறையினா... மேலும் பார்க்க