செய்திகள் :

ரோஹித் சர்மா ஏன் ஓய்வு பெறவேண்டும்?: ஏபிடி வில்லியர்ஸ்

post image

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ரோஹித் சர்மா ஓய்வு பெறுவதற்கு காரணமே இல்லை என தென்னாப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை இந்திய அணி வென்றவுடன் ரோஹித், கோலி, ஜடேஜா ஓய்வை அறிவித்தார்கள். அதேபோல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றவுடன் ரோஹித் சர்மா ஓய்வு பெறுவாரென எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ரோஹித் சர்மா இதனை மறுத்துவிட்டார். விராட் கோலியும் எதுவும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தெ.ஆ.வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் கூறியதாவது:

ரோஹித் ஏன் ஓய்வு பெறவேண்டும்?

மற்ற கேப்டன்களை ஒப்பிடும்போது ரோஹித்தின் வெற்றி சதவிகிதம் 74%ஆக இருக்கிறது. இது மற்றவர்களை மிக அதிகம். ரோஹித் இதேபோல் சென்றால் எக்காலத்துக்குமான ஒருநாள் போட்டிகளின் மிகச் சிறந்த கேப்டனாக மாறிவிடுவார்.

வதந்திகளை ரோஹித்தும் ஓய்வுபெறப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.

ரோஹித் ஏன் ஓய்வு பெறவேண்டும்? கேப்டனாக மட்டுமில்லை, பேட்டராகவும் ரோஹித் சிறப்பாக செயல்படுகிறார். இறுதிப் போட்டியில் 76 ரன்கள் அடித்து சிறப்பான தொடக்கதை அளித்தார்.

ரோஹித் சாதனைகளே அவருக்காக பேசும்

அழுத்தம் அதிகமாக இருக்கும்போது முதல் ஆளாக முன்னின்று அணியை வழிநடத்தினார். அவர் எந்தவிதமான விமர்சனங்களையும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவரது சாதனைகளே அவருக்காக பேசும். அது மட்டுமில்லை, அவர் தனது ஆட்டத்தையும் மாற்றியுள்ளார்.

பவர்பிளேவில் அவரது ஸ்டிரைக்-ரேட்டை பாருங்கள். 2022க்குப் பிறகு 115ஆக முன்னேறியுள்ளது. அதுதான் நல்லது, சிறந்ததுக்குமான வித்தியாசம். அது உங்களது சொந்த ஆட்டத்தை மாற்றும், அது நிற்கவே போவதில்லை.

எப்போதுமே எதாவது சிறப்பாக செயல்படவும் கற்றுக்கொள்ளவும் இருக்கத்தான் செய்யும் என்றார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிடும் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்... மேலும் பார்க்க

டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாட விரும்பும் கே.எல்.ராகுல்!

டாப் ஆர்டரில் களமிறங்கி நன்றாக விளையாடுவது தனக்கு இயல்பாக வருவதாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் வழக்கமாக 5-வத... மேலும் பார்க்க

டி20 சாம்பியன்-ஷிப் தொடர்: பாபர் அசாம், நசீம் ஷா விலகல்!

தேசிய டி20 சாம்பியன்-ஷிப் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் மற்றும் நசீம் ஷா இருவரும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்பியன்ஸ் ட... மேலும் பார்க்க

டி20 தொடருக்காக நியூசிலாந்து சென்றடைந்த பாகிஸ்தான் அணி!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுவதற்கான பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்றடைந்தது.பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிக... மேலும் பார்க்க

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் சையத் அபித் அலி காலமானார்!

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்ரவுண்டர் சையத் அபித் அலி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.ஆல்ரவுண்டரான சையத் அபித் அலி ஃபீல்டிங்கிக்கு பெயர் பெற்றவர். இவர் 1967 ஆம் ஆண்டு அடிலெய்டில் ந... மேலும் பார்க்க

லக்னௌ அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்கவுள்ள ஆஸி. ஆல்ரவுண்டர்!

பிரபல ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் லக்னௌ அணியில் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடவுள்ளார்.இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சா... மேலும் பார்க்க