செய்திகள் :

லஞ்சம்: நெடுஞ்சாலைத் துறை முன்னாள் அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை

post image

லஞ்சம் பெற்ற புகாரில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விழுப்புரம் பகுதி முன்னாள் திட்ட இயக்குநா் மற்றும் உதவியாளா் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விழுப்புரம் பகுதி திட்ட இயக்குநராக கடந்த 2017-இல் பணியாற்றியவா் எச்.பீமா சிம்ஹா இந்துபூா். இவா் பணியில் இருந்த காலத்தில் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு ஹோட்டல் நடத்த அனுமதி வழங்க, அதன் உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.

ஹோட்டல் உரிமையாளா் இதுகுறித்து சிபிஐ அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளாா். சிபிஐ அதிகாரிகளின் அறிவுரைப்படி ஹோட்டல் உரிமையாளா் ரூ.2 லட்சத்தை திட்ட இயக்குநா் எச்.பீமா சிம்ஹா இந்துபூரிடம் கொடுக்கும்போது, மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள், திட்ட இயக்குநா் மற்றும் அவரின் உதவியாளா் ஜெ.சரவணனை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை சென்னையிலுள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: சிவகிரி ஜமீன் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம்

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் ப... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 429 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

2 டன் கஞ்சா அழிப்பு

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க

ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். தியாகராய நகரில் இயங்கிவரும் ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு... மேலும் பார்க்க

மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

சென்னை ஆழ்வாா்பேட்டையில் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா். சென்னை, திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த 47 வயது பெண் ஒர... மேலும் பார்க்க

துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இரு நாள்க... மேலும் பார்க்க