செய்திகள் :

லஞ்ச வழக்கில் ஜாமீன் பெற்ற லாலு பிரசாத்துக்கு நாட்டின் உயரிய விருது?

post image

பிகாரில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத்துக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு அக்கட்சி உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

பிகாரின் எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ்வுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று அம்மாநில சட்டப்பேரவையில் அக்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து, அக்கட்சி எம்எல்ஏ முகேஷ் குமார் ரௌஷன் கூறியதாவது, ``நாட்டிலேயே லாலு பிரசாத் மிகவும் பிரபலமானவர். அவர்தான், சமூக நீதியின் மூலம் குரலற்றவர்களுக்கு குரல் கொடுத்தார். ஏழைகள் மற்றும் நலிந்தவர்களின் `மேசியா’வாக (விடுதலை மீட்பாளர்) லாலு திகழ்கிறார்.

ஏழைகளின் உரிமைகளுக்காக போராடியதுடன், அவர்களுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர். அவர், நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதான பாரத ரத்னாவுக்கு தகுதியானவர். இது தொடர்பாக, மத்திய அரசுக்கு மாநில அரசு ஒரு முன்மொழிவை அனுப்ப வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.

இதையும் படிக்க:மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடத்தப்படுகிறது: ராகுல்

இருப்பினும், இது தொடர்பாக மாநில அரசின் பரிசீலனையில் உள்ள எந்த திட்டமும் இல்லை என்று கூறிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் விஜய் குமார் சௌத்ரி கூறினார். மேலும், தனது தனிப்பட்ட உறுப்பினர் மசோதாவை முகேஷ் திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறினார்.

இதனையடுத்து, மசோதாவை முகேஷ் திரும்பப் பெற மறுத்ததால், குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. குரல் வாக்கெடுப்பிலும் இந்த மசோதா வெற்றி பெறவில்லை.

மாட்டுத் தீவின ஊழல் வழக்குகள் சிலவற்றில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த லாலு, இப்போது உடல்நலப் பிரச்னைகள் காரணமாக ஜாமீனில் வெளியே உள்ளார். இந்த நிலையில், ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் லாலு பிரசாத், அவரின் மகன்கள் தேஜ் பிரதாப் யாதவ், தேஜஸ்வி யாதவ், மகள் ஹேமா யாதவ் ஆகியோருக்கு தில்லி நீதிமன்றம் சமீபத்தில் சம்மன் அனுப்பியது.

தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புது தில்லி: ‘தனியாா் மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்’ என மத்திய அரசை காங்கிரஸ் ... மேலும் பார்க்க

மின் வாகன உற்பத்தி: 2030-இல் இந்தியா முதன்மை நாடாகும்: நிதின் கட்கரி

தாணே: ‘2030-இல் மின்சார வாகன உற்பத்தியில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியா உருவெடுக்கும்’ என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி திங்கள்கிழமை தெரிவித்தாா். மேலும்... மேலும் பார்க்க

இந்தியாவின் வெளிநாட்டு கடன் 71,790 கோடி டாலராக அதிகரிப்பு

புது தில்லி: இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் கடந்த ஆண்டு இறுதியில் 71,790 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு, டிசம்பரில் 64,870 கோடி டாலராக இருந்த நாட்டின் அந்நிய கடன் ஒரே ஆண்டில் 10 ... மேலும் பார்க்க

கன்னித்தன்மை பரிசோதனைக்கு கட்டாயப்படுத்துவது சட்டவிரோதம்: சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம்

பிலாஸ்பூா்: கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ள பெண்களைக் கட்டாயப்படுத்துவது அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-ஐ மீறுவதாகும் என்று சத்தீஸ்கா் உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த உயா்நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க

வேட்டையாடப்படும் இந்தியக் கல்வி முறை: மத்திய அரசு மீது சோனியா விமா்சனம்

புது தில்லி: பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசின் கல்விக் கொள்கையை நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவா் சோனியா காந்தி கடுமையாக விமா்சித்துள்ளாா். ‘மத்தியில் அதிகார குவிப்பு, வணிகமயமாக்கல், வகுப்புவாதமயமா... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு தயாா்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய தயாா் நிலையில் மத்திய அரசு உள்ளதாக மத்திய சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை தெர... மேலும் பார்க்க