செய்திகள் :

லண்டன் லார்ஸ் திடல் எம்சிசி அருங்காட்சியகத்தில் சச்சினின் உருவப்படம் திறப்பு!

post image

லண்டன் லார்ஸ் திடலில் உள்ள எம்சிசி அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் உருவப்படம் திறக்கப்பட்டது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடருக்கு 'ஆண்டர்சன் - டெண்டுல்கர் தொடர்' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் இந்தியா, இங்கிலாந்து முறையே தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்ற நிலையில் இந்தத் தொடர் சமனில் இருக்கிறது. இவ்விரு அணிகளும் விளையாடும் மூன்றாவது போட்டி ‘கிரிக்கெட்டின் தாயகம்’ என அழைக்கப்படும் லண்டனின் லார்ட்ஸ் திடலில் இன்று(ஜூலை 10) தொடங்கியது.

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள எம்சிசி அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை கௌரவிக்கும் விதமாக அவரின் உருவப்படம் திறக்கப்பட்டது.

18 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட இந்தப் படம், ஓவியர் ஸ்டூவர்ட் பியர்சன் ரைட் என்பவரால் வரையப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிவரை அருங்காட்சியகத்தில் இருக்கும் இந்தப் படம் பின்னர் பெவிலியனுக்கு மாற்றப்படும். ஓவியர் ஸ்டூவர்ட் பியர்சன் ரைட்டுக்கு இது முதல் படம் கிடையாது. இவர் இதற்கு முன்னதாக, கபில் தேவ், பிஷன் சிங் பேடி, திலிப் வெங்சர்க்கார் ஆகியோரின் படங்களையும் வரைந்துள்ளார்.

இதுபற்றி சச்சின் டெண்டுல்கர் கூறும்போது, “இது எனக்கு மிகப்பெரிய கௌரவம். 1983 ஆம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பைய வென்ற போது நான் லார்ட்ஸ் திடலில் இருந்தேன்.

நான் நம்முடைய கேப்டன் கபில்தேவ் கோப்பையை வென்றிருந்தார். அந்தத் தருணம்தான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்குத் துளிர்விட்டது. தற்போது என்னுடைய உருவப்படமும் பெவிலியனுக்குச் செல்லவிருக்கிறது. இது மிகவும் சிறப்பானதாகும்” என்றார்.

‘தி லார்ட்ஸ் போர்ட்ரைட் புரோகிராம்’ கடந்த முப்பதாண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஆனால், 1950 ஆம் ஆண்டுகளில் திறக்கப்பட்ட எம்சிசி அருங்காட்சியகம் விக்டோரியன் காலத்தில் இருந்தே செயல்பட்டு வருகிறது. மேலும், ஐரோப்பாவிலேயே சிறந்த விளையாட்டு அருங்காட்சியகமாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்த அருங்காட்சியகத்தில் லாங் ரூம் கேலரி ஒன்று உள்ளது. இங்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க புகைப்படங்கள் அனைத்தும் உள்ளன. இங்கு 3000 படங்கள் உள்ளன. அவற்றில் 300 உருவப்படங்களாகும்.

Sachin Tendulkar's portrait unveiled in MCC Museum at Lord's .

இதையும் படிக்க : இங்கிலாந்து மகளிருக்கு எதிராக முதல்முறை... டி20 தொடரை வென்ற இந்திய மகளிரணி உற்சாகம்!

டி20 உலகக் கோப்பை: முதல்முறையாகத் தேர்வாகி வரலாறு படைத்த இத்தாலி!

கடைசி போட்டியில் தோற்றும் டி20 உலகக் கோப்பை 2026-இல் தேர்வாகி இத்தாலி அணி வரலாறு படைத்துள்ளது.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி கால்பந்தில் மிகப்பெரிய செல்வாக்கினை செலுத்துகிறது. இருப்பினும் கிரிக்கெட... மேலும் பார்க்க

டிஎஸ்கேவை வீழ்த்த உதவிய பொல்லார்டு..! சிஎஸ்கே ரசிகர்களை சீண்டிய மும்பை இந்தியன்ஸ்!

கைரன் பொல்லார்டுக்காக மும்பை இந்தியன்ஸ் பதிவிட்ட பதிவு சிஎஸ்கே ரசிகளை சீண்டும் விதமாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் சேலஞ்சர் போட்டியில் டெக்ஸஸ் சூப்பர் கிங்ஸ... மேலும் பார்க்க

இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆஸி.யின் கடைசி டெஸ்ட்டுக்கான பிளேயிங் லெவன் இன்னும் அறிவிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்டில் 2-0 என தொடரை வென்றுள்ள நிலையில் பிங்க் பந்... மேலும் பார்க்க

லார்ட்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா; இங்கிலாந்து 387 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் திடலில் நேற்று ... மேலும் பார்க்க

இரண்டாம் நாளிலும் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை; பிசிசிஐ கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாளிலும் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்யாதது, பேட்டிங்கில் அவர் களமிறக்கப்படுவாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து... மேலும் பார்க்க

எனது சிறப்பான பந்துவீச்சுக்குக் காரணம் பாட் கம்மின்ஸ்: நிதீஷ் ரெட்டி

இந்திய வீரர் நிதீஷ் ரெட்டி தனது சிறப்பான பந்துவீச்சுக்குக் காரணம் பாட் கம்மின்ஸ் எனக் கூறியுள்ளார். இந்தியாவின் ஆல் ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி இந்தியாவுக்கு கடந்த பிஜிடி தொடரில் டெஸ்ட்டில் அறிமுகமா... மேலும் பார்க்க