மோசமான சாலைகளுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்? மத்திய அரசுக்கு ராஜஸ்தான் எம்.பி. க...
லண்டன் விமான நிலையம் இன்று இயங்காது! ஏன்?
உலகின் மிகவும் பரபரப்பான லண்டனின் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம் இன்று(மார்ச் 21) நள்ளிரவு 11.59 மணிவரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்துக்கு மின்சாரம் விநியோகிக்கும் மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தமிழக எம்பிக்கள் இடைநீக்கம்? இன்று முடிவு!
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவு 11.23 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் முதல்கட்டமாக 10 வாகனங்களில் வருகைதந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அப்பகுதியில் இருந்த 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, 200 மீட்டர் சுற்றளவுக்கு தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
விபத்தின் காரணமாக புகைமூட்டம் அதிகளவில் காணப்படுவதாலும் மின் விநியோகம் தடை பட்டதாலும் லண்டன் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை முழுவதும் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், லண்டன் விமான நிலையத்துக்கு வருகை தரவிருக்கும் அனைத்து விமானங்களும் வேறு விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.
பயணிகள் யாரும் விமான நிலையப் பகுதிக்கு வரவேண்டாம் என்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு விமானத்தின் நேரத்தை உறுதி செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு விமான நிலையங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான விமானங்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.