செய்திகள் :

ஸ்லோவாக்கியாவில் வேகமாக பரவும் தொற்று! எல்லைக் கட்டுப்பாடு விதித்த செக் குடியரசு!

post image

ஸ்லோவாக்கியா நாட்டில் வேகமாக பரவி வரும் கால்நடை தொற்றினால் அதன் அண்டை நாடான செக் குடியரசு எல்லைக் கட்டுப்பாடு விதித்துள்ளது.

ஸ்லோவாக்கியா நாட்டின் மூன்று பண்ணைகளிலுள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் தொற்று பரவியுள்ளது. இதனால், அதன் பக்கத்து நாடான செக் குடியரசில் எல்லைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அந்நாட்டை கடக்கும் நான்கு முக்கிய எல்லைப் பாதைகளின் வழியாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கால்நடைகளுக்கு செக் குடியரசு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

இதுகுறித்து செக் குடியரசின் வேளாண்மைத் துறை அமைச்சர் மாரெக் வைபோர்னி கூறுகையில், ஸ்லோவாக்கியாவுடனான எல்லையைக் கடக்கும் இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் முக்கிய விவசாய சங்கங்கள் மற்றும் அதன் தலைவர்களை தொடர்புக்கொண்டு அவசரகால நடவடிக்கைகள் மற்றும் கடுமையான உயிரியல் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தியதாகக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:முன்னாள் ஆர்ஜென்டீன அதிபர் மீது அமெரிக்கா தடை!

இந்நிலையில், இம்மாத (மார்ச்) துவக்கத்தில் கோமாரி நோய் பரவலினால் ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கால்நடைகளுக்கு செக் குடியரசு தடை விதித்திருந்த நிலையில் அந்த தடைகள் கடந்த சில நாள்களுக்கு முன்னர் விலக்கப்பட்டது.

முன்னதாக, கோமாரி நோயானது ஆடு, மாடு, பன்றி மற்றும் செம்மறி ஆடு போன்ற கால்நடைகளை சுவாசக் காற்றின் வழியாகவும் விலங்குகளுக்கு இடையிலான நேரடி தொடர்பின் மூலமாகவும் தாக்கும் அபாயமுள்ளது.

இந்த நோய்யினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு காய்ச்சல், பசியின்மை, அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பு, வாய் மற்றும் கால்களில் கொப்புளங்கள் ஆகிய அறிகுறிகள் உண்டாகக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகரின் முக்கிய கட்டடங்களைக் கைப்பற்றியதாக சூடான் ராணுவம் அறிவிப்பு!

வட ஆப்பிரிக்க நாடான சூடானின் ராணுவப் படைகள் தலைநகர் கார்டூமிலுள்ள முக்கிய கட்டடங்களைக் கைப்பற்றியதாகத் தெரிவித்துள்ளது.சூடான் ராணுவம் அவர்களது எதிராளிகளான துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளின் (ஆர்.எஸ்.எ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கையெறி குண்டு தாக்குதல்! 3 பேர் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடைபெற்ற கையெறி குண்டு தாக்குதலில் 3 பலியாகியுள்ளனர்.கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள குர்ராம் மாவட்டத்தில் கட்டுமானம் மேற்கொ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 5 கொலைகள்; அதிமுக ஆட்சியைவிட அதிகம்! - அன்புமணி ராமதாஸ்

அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் படுகொலைகள் அதிகமாக நடந்திருப்பதாகவும் இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? எனவும் பாமகதலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸை உளவுப் பார்க்கின்றதா சீனா? தொடரும் உளவாளிகளின் கைதுகள்!

பிலிப்பின்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக தகவல் சேகரித்த சீன உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலிப்பின்ஸில் அரசு மற்றும் ராணுவத்தின் முக்கிய துறைகளில் சீனாவின் ஈடுபாடுள்ளதா? என்று எழுந்த சந்தேகத்தினால் அந... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: முதல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய இந்தியாவின் பல்வேறு மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட... மேலும் பார்க்க

தென் கொரியாவில் பயங்கர காட்டுத் தீ! மக்கள் வெளியேற உத்தரவு!

தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீயினால் அப்பகுதி மக்களை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தென் கொரியாவின் சான்சியோங் மாகாணத்திலுள்ள வனப்பகுதியில் நேற்று (மார்ச் 21) ... மேலும் பார்க்க