செய்திகள் :

தாணேவிலிருந்து கனடா வரை! ஓர் தெரு நாயின் கதை!

post image

மகாரஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தைச் சேர்ந்த தெரு நாய் ஒன்று கனடா நாட்டில் தத்தெடுக்கப்பட்டுள்ளது.

கனடா நாட்டைச் சேர்ந்த சலீல் நவ்காரே என்ற நபர் கடந்த 2024 டிசம்பர் மாதம் தாணேவின் வர்தக் நகர் பகுதியிலுள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு விடுமுறையில் வந்துள்ளார். அப்போது, அப்பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் ராணி எனப் பெயரிடப்பட்ட பெண் நாய் ஒன்று சுற்றித் திரிந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சில நாள்கள் அந்த நாயுடன் பழகிய சலீல், ப்ளாண்ட்ஸ் அண்ட் அனிமல்ஸ் வெல்ஃபேர் சொசைட்டி எனும் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அதனை பராமரித்து வந்ததுள்ளார். பின்னர், அவர்களால் அந்த நாய் தற்காலிக தங்குமிடத்தில் சேர்க்கப்பட்டு அங்கு ராணிக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்துள்ளனர்.

இதையும் படிக்க: பெண் உதவி ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை; காவல் அதிகாரி கைது!

இந்நிலையில், ராணியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு அது பயணம் செய்ய தகுதியடைந்ததினால், சலீல் செல்லப்பிராணி போக்குவரத்து நிபுணரின் உதவியை நாடினார், அவர் மூலம் அதன் இடமாற்றத்திற்குத் தேவையான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மற்றும் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டது.

தற்போது, சலீலின் நண்பர் ஒருவர் ராணியின் விமானப் பயணச்சீட்டை பதிவு செய்துள்ளார். அதனால், கடந்த மார்ச்.20 அன்று பாரிஸ் செல்லும் விமானத்தில் தனது பயணத்தை துவங்கிய ராணி நேற்று (மார்ச் 21) கனடாவின் டொராண்டோவிலுள்ள சலீல் வீட்டை அடைந்து தனது புதிய குடும்பத்துடன் இணைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தலைநகரின் முக்கிய கட்டடங்களைக் கைப்பற்றியதாக சூடான் ராணுவம் அறிவிப்பு!

வட ஆப்பிரிக்க நாடான சூடானின் ராணுவப் படைகள் தலைநகர் கார்டூமிலுள்ள முக்கிய கட்டடங்களைக் கைப்பற்றியதாகத் தெரிவித்துள்ளது.சூடான் ராணுவம் அவர்களது எதிராளிகளான துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளின் (ஆர்.எஸ்.எ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கையெறி குண்டு தாக்குதல்! 3 பேர் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடைபெற்ற கையெறி குண்டு தாக்குதலில் 3 பலியாகியுள்ளனர்.கைபர் பக்துன்குவா மாகாணத்தின் ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள குர்ராம் மாவட்டத்தில் கட்டுமானம் மேற்கொ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 5 கொலைகள்; அதிமுக ஆட்சியைவிட அதிகம்! - அன்புமணி ராமதாஸ்

அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் படுகொலைகள் அதிகமாக நடந்திருப்பதாகவும் இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? எனவும் பாமகதலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸை உளவுப் பார்க்கின்றதா சீனா? தொடரும் உளவாளிகளின் கைதுகள்!

பிலிப்பின்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக தகவல் சேகரித்த சீன உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலிப்பின்ஸில் அரசு மற்றும் ராணுவத்தின் முக்கிய துறைகளில் சீனாவின் ஈடுபாடுள்ளதா? என்று எழுந்த சந்தேகத்தினால் அந... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: முதல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன?

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய இந்தியாவின் பல்வேறு மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட... மேலும் பார்க்க

தென் கொரியாவில் பயங்கர காட்டுத் தீ! மக்கள் வெளியேற உத்தரவு!

தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீயினால் அப்பகுதி மக்களை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தென் கொரியாவின் சான்சியோங் மாகாணத்திலுள்ள வனப்பகுதியில் நேற்று (மார்ச் 21) ... மேலும் பார்க்க