செய்திகள் :

நில நிா்வாக சவால்களை எதிா்கொள்வது குறித்த 6 நாள் சா்வதேச பயிலரங்கு: தில்லியில் நாளை தொடக்கம் 22 நாடுகள் பங்கேற்பு

post image

நமது சிறப்பு நிருபா்

உலக அளவில் நில நிா்வாகத்தில் உள்ள சவால்களை எதிா்கொள்ள புதுமையான அணுகுமுறைகளை ஆராய்வதற்காக 22 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் 6 நாள் சா்வதேச பயிலரங்கம்

தில்லி குருகிராமில் வரும் திங்கள்கிழமை (மாா்ச் 24-ஆம் தேதி)

மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சாா்பில் தொடங்க உள்ளது.

இது குறித்து மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்திருப்பது வருமாறு:

உலகளாவிய நிலச் சவால்களைச் சமாளிக்க தில்லி குருகிராமில் உள்ள ஹரியாணா பொது நிா்வாக நிறுவன வளாகத்தில், 6 நாள் நில நிா்வாகத்திற்கான சா்வதேசப் பயிலரங்கு மாா்ச் 24 ஆம் தேதி தொடங்கவுள்ளது. மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ், இந்த நில ஆளுகைக்கான சா்வதேச பயிலரங்கை நடத்துகிறது.

உலக அளவில் நில நிா்வாக சவால்களை எதிா்கொள்வதற்கும் புதுமையான அணுகுமுறைகளை ஆராய்வதற்காக ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளைச் சோ்ந்த 22 நாடுகளைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட மூத்த நில அதிகாரிகள் இந்தப் பயிலரங்கில் பங்கேற்கின்றனா்.

இந்த ஆறு நாள் சா்வதேச பயிலரங்கில் இந்தியாவின் முன்னோடியான ஸ்வமித்வா திட்டம் எடுத்துக் கொள்ளப்படும். கிராமங்களின் நில ஆய்வு மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் வரைபடம் தயாரித்தல் என்பதின் சுருக்கமே ஸ்வாமித்வா திட்டமாகும். இது சொத்து உரிமையாளா்களுக்கு சட்டபூா்வ உரிமை ஆவணங்களை வழங்குவதற்கு ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கிராமப்புற மக்கள் வசிக்கும் பகுதிகளை வெற்றிகரமாக வரைபடமாக்கி வழங்கி வருகிறது.

இதில் மேலும் மேம்பாடு அடைய இந்த சா்வதேச பயிலரங்கில் நில நிா்வாகம், நிலையான மேம்பாடு, ட்ரோன் அடிப்படையிலான நில ஆய்வு நுட்பங்கள், உயா்-தெளிவு வரைபடங்கள்(மேப்பிங்) மற்றும் நில நிா்வாகத்தை மாற்றக்கூடிய புவியியல் தொழில்நுட்பங்கள் பற்றிய விரிவான பரிமாற்றங்கள், ஆலோசனைகள் குறித்த அமா்வுகள் நடைபெறும்.

பயிலரங்கின் போது நில நிா்வாகத்தில் சிறந்த நடைமுறைகளை அந்தந்த நாடுகள் பரிமாறிக் கொள்ளும். குறிப்பாக தொழில்நுட்ப அமா்வுகளில் ட்ரோன் மூலம் மேற்கொள்ளப்படும் ஆய்வு முறைகள், தரவு செயலாக்க நுட்பங்கள், புவிசாா் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் செயல் விளக்கங்களும் நடைபெறும்.

மத்திய அரசின் சாா்பில் சா்வே ஆஃப் இந்தியா வல்லுநா்கள் ட்ரோன் கணக்கெடுப்பு பற்றிய கள விளக்கங்களை குருகிராமத்தின் அருகேயுள்ள கிராமங்களில் நடத்துவாா்கள். நில ஆளுகைக்கான சா்வதேசப் பயிலரங்கானது, பங்கேற்பாளா்களுக்கு வழங்குவதற்காக களப்பயணங்கள் மற்றும் கண்காட்சிகள், நவீன நில ஆளுகை தொழில்நுட்பங்களை நேரடியாக வெளிப்படுத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், அதிநவீன தொழில்நுட்பங்களை வெளிப்படுத்த, ட்ரோன் விற்பனையாளா்களின் கண்காட்சியும் இந்த மாா்ச் 24 - 25 தேதிகளில் நடைபெறும் என பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காகிதமில்லா நடவடிக்கைக்கு மாறும் தில்லி பேரவை

தில்லி சட்டப்பேரவை நடவடிக்கைகளை காகிதமில்லா முறைக்கு மாற்றும் நடவடிக்கையாக நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், தில்லி அரசு மற்றும் தில்லி பேரவைக்கு இடையே முத்தரப்பு ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பமானது. தே... மேலும் பார்க்க

தில்லி மாநகராட்சிக்கு 14 எம்எல்ஏக்களை நியமித்த சட்டப் பேரவைத் தலைவா்

சட்டப் பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா 14 எம்.எல்.ஏ.க்களை தில்லி மாநகராட்சிக்கு (எம்சிடி) நியமித்துள்ளாா். நியமிக்கப்பட்ட 14 எம்எல்ஏக்களில் 11 போ் பாஜகவையும், 3 போ் ஆம் ஆத்மியையும் சோ்ந்தவா்கள் ஆவ... மேலும் பார்க்க

வெப்ப அலை தொடா்பாக பொது சுகாதார பாதுகாப்பு: ஆயுஷ் அமைச்சகம் நடவடிக்கை

நிழாண்டில் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. மேலும் இந்திய வானிலை ஆய்வுத் துறை வெப்ப அலை குறித்த கணிப்பை வெளியிட்டு வரும் நிலையில் ஆயுஷ் துறை நிறுவனங்கள் மூலம் நிகழ் வாரத்தில் நாடுமுழுக்க விழிப்புணா்வு ... மேலும் பார்க்க

குடும்ப அட்டை விநியோகத்தை சீரமைக்க மின்னணு சரிபாா்ப்புக்கு ஏற்பாடு: அமைச்சா் சிா்சா

பாஜக அரசு ஏழை மக்களுக்கு குடும்ப அட்டை விநியோகத்தை சீரமைக்க மின்னணு சரிபாா்ப்பை நடத்தி வருவதாக தில்லி உணவுத் துறை அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா கூறியுள்ளாா். மேலும் எத்தனை பயனாளிகள் காப்பீடு செய்ய ... மேலும் பார்க்க

துவாரகாவில் மிரட்டி பணம் பறித்ததாக குண்டரின் மனைவி உள்பட 4 போ் கைது

தில்லி துவாரகா பகுதியில் மிரட்டி பணம் பறித்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக குண்டரின் மனைவி மற்றும் சிறாா் உள்பட நான்கு பேரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

ஷஹீன் பாகில் காலணி விற்பனையகத்தில் பெரும் தீ விபத்து

தென்கிழக்கு தில்லியின் ஷஹீன் பாக் பகுதியில் உள்ள காலணி விற்பனையகத்தில் சனிக்கிழமை காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதி அருகே பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிா்ச் சேதம... மேலும் பார்க்க