செய்திகள் :

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக விரும்புகிறாரா ககிசோ ரபாடா?

post image

தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவது குறித்து அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா மனம் திறந்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்கள் கேப்டனாக அணியை வழிநடத்துவது ஒரு சில அணிகளில் மட்டுமே காணப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியை வேகப் பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் வெற்றிகரமாக கேப்டனாக வழிநடத்தி வருகிறார். இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அவ்வப்போது இந்திய அணியை டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.

இதையும் படிக்க: ஐபிஎல் தொடரில் சுனில் நரைன் புதிய சாதனை!

வாய்ப்பு கிடைத்தால்...

பாட் கம்மின்ஸ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற வேகப் பந்துவீச்சாளர்கள் அவர்களது தேசிய அணிகளை வழிநடத்தி வரும் நிலையில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தன்னை கேப்டனாக செயல்படுமாறு கூறினால், அதற்கு தீவிரமாக கவனம் கொடுப்பேன் என தென்னாப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்பட உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என்ற கேள்வி அதிகமாக என்னிடம் கேட்கப்படுகிறது. அந்த கேள்விகள் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டனாக செயல்படுவது குறித்து என்னை சிந்திக்க வைக்கிறது. ஆனால், அந்த கேள்விகளை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியமோ அல்லது பயிற்சியாளர்களோ என்னிடம் கேட்டால், கேப்டன் பொறுப்பு குறித்து தீவிரமாக கவனம் கொடுப்பேன் என்றார்.

இதையும் படிக்க: ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சாதனையை நிகழ்த்திய ஆர்ச்சர்!

தென்னாப்பிரிக்க அணிக்காக 70 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ககிசோ ரபாடா 327 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 168 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 71 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.

2025-26 ஆம் ஆண்டுக்கான ஐசிசி நடுவர்கள் விவரம்! புதுமுகங்கள் இருவருக்கு வாய்ப்பு!

2025-26 ஆம் ஆண்டுக்கான ஐசிசி நடுவர்கள் விவரங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் புதுமுகங்கள் இருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எலைட் நடுவர்கள் விவரத்தை அற... மேலும் பார்க்க

மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான பிசிசிஐ ஒப்பந்தம்: யாரெல்லாம் இடம்பிடித்துள்ளனர்?

மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான பிசிசிஐ-யின் மத்திய ஊதிய ஒப்பந்தப் பட்டியல் திங்கள்கிழமை வெளியானது. அதில் நட்சத்திர வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனா, தீப்தி ஷர்மா ஆகியோர் கிரேட்-ஏ ப... மேலும் பார்க்க

பெண் குழந்தைக்கு தந்தையானார் கேஎல் ராகுல்!

இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுலின் மனைவியும் நடிகையுமான ஆதியா ஷெட்டி பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். இந்த தகவலை அவர், தம் சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து... மேலும் பார்க்க

கோலிக்கும் எனக்கும் சீனியர் - ஜூனியர் உறவு! மனம் திறந்த தோனி

விராட் கோலியும் தோனியும் எப்படி பழகுவார்கள் பேசுவார்கள் என்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனி. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த சனிக்கிழமை(மார்ச் 22) தொடங்கி நடைபெற்று... மேலும் பார்க்க

ஆட்டத்தின்போது தமிம் இக்பாலுக்கு மாரடைப்பு!

வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரரான தமிம் இக்பால் தற்போது உள்ளூர் போட்டிகளில் க... மேலும் பார்க்க

அப்துல் சமத் போராட்டம் வீண்: டி20 தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 3-1 என வென்றது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி வருகிறது. 4ஆவது டி20 போட்டியில் நியூசிலாந்து அபாரமாக விளையாடி 220 ரன்கள் கு... மேலும் பார்க்க