செய்திகள் :

பெண் உதவி ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை; காவல் அதிகாரி கைது!

post image

உத்தரப் பிரதேசத்தில் பெண் உதவி ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை அளித்த உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டத்தில் மகோரா காவல் நிலையத்தில் புதன்கிழமை இரவுப் பணியின்போது, உதவி ஆய்வாளரான மோகித் ராணா பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறி, மூத்த காவல் கண்காணிப்பாளரிடம் பெண் உதவி ஆய்வாளர் புகார் அளித்தார்.

மேலும், தன்னிடம் ஆபாசப் படங்களைப் பார்க்கச் சொல்லி வற்புறுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதனடிப்படையில், மோகித்திடம் விசாரணை மேற்கொண்டபோது, தப்பிக்க முயன்றதோடு, ஆதாரங்களை அழிக்கும் நோக்கில், ஆபாசப் படங்கள் இருந்த தனது ஸ்மார்ட்வாட்ச் மற்றும் மொபைல் போனையும் மோகித் வெளியே வீசி எறிந்தார்.

இதையும் படிக்க:ஏப். 1 முதல் யுபிஐ சேவை நிறுத்தம்!

இருப்பினும், மோகித்திடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பெண் உதவி ஆய்வாளரின் பாலியல் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதால், அவரை கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மோகித்தின் மொபைல் போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்சை தேடும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கேரளம்: தேநீர் என நம்ப வைத்து 12 வயது சிறுவனுக்கு மது கொடுத்த பெண் கைது

கேரளத்தில் தேநீர் என நம்ப வைத்து 12 வயது சிறுவனுக்கு மது கொடுத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தின் பீருமேடு பகுதியில் உள்ள தனது வீட்டில் பெண் ஒருவர் கருப்பு தேநீர் என்று... மேலும் பார்க்க

நாக்பூர் கலவரத்தில் ஈடுபட்டவர்களிடம் நஷ்டஈடு வசூலிக்கப்படும்: ஃபட்னவீஸ்

நாக்பூர் வன்முறையால் ஏற்பட்ட சேதத்திற்கான நஷ்ட செலவை கலவரத்தில் ஈடுபட்டவர்களிடமிருந்தே வசூலிக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார். மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜி நகர்... மேலும் பார்க்க

ஒவ்வொரு நிமிடமும் கோடி ரூபாய் கடன் வாங்கும் தெலங்கானா: பாஜக குற்றச்சாட்டு

தெலங்கானாவில் மாநில அரசின் கடன் வாங்கும் போக்கால், தனிநபர் கடன் சுமை அதிகரித்துள்ளதாக பாஜக தலைவர் மகேஷ்வர் ரெட்டி குற்றம் சாட்டினார்.தெலங்கானா சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மேற்கொள்ளப்பட்டது. ... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற நீதிபதிகள் வந்தது சரி, பிரதமர் எப்போது வருவார்?காங்கிரஸ் கேள்வி!

மணிப்பூர் வருகை தந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழுவைக் காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் வரவேற்றார் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எப்போது மாநிலத்திற்கு வருகை தருவார் என்ற கேள்வியை எழுப்பினார். தனியார் செ... மேலும் பார்க்க

இந்தியாவில் புயலை ஏற்படுத்தும் குரோக்; சிரிக்கும் மஸ்க்!

இந்தியாவில் குரோக் புயலைத் தூண்டுவதாக வெளியான செய்திக்கு எலான் மஸ்க் சிரிப்பது போன்று பதிவிட்டுள்ளார்.டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் செயல் நுண்ணறிவுத் தளமான குரோக் சாட்போட், இந்தியாவில் பிரச்னைகளைத் ... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி கடிதம்!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஓய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும... மேலும் பார்க்க