செய்திகள் :

அமெரிக்காவிலிருந்து 5 லட்சம் மக்களை ஒரே மாதத்தில் நாடு கடத்த திட்டம்?

post image

வாஷிங்டன் : வெளிநாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறியுள்ள மக்களில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட உரிமை திரும்பப் பெறப்படுவதாக அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் வெள்ளிக்கிழமை(மார்ச் 21) அறிவித்துள்ளது.

இந்த அதிரடி உத்தரவால் கியூபா(1,10,900), ஹைதி(2,13,000), நிகாராகுவா(93,000), வெனிஸூலா(1,20,700) ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்து குடியேறியுள்ள 5,32,000 பேர் பாதிக்கப்படுவர். மேற்கண்டோர் அனைவரும் முந்தைய அமெரிக்க அதிபரான பைடன் ஆட்சியில் கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்டதொரு திட்டத்தின்கீழ் அமெரிக்காவில் சட்ட அங்கீகாரத்துடன் குடியேரியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார ரீதியாகவும் பிற அரசியல் காரணங்களாலும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள கியூபா, ஹைதி, நிகாராகுவா, வெனிஸூலா ஆகிய 4 நாடுகளிலிருந்தும் அமெரிக்காவுக்கு குடியேற விரும்புவோர், கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து 2 ஆண்டுகளுக்கு அமெரிக்காவில் சட்ட அனுமதியுடன் தங்கிக்கொள்ள முந்தைய அமெரிக்க அதிப்பரான ஜோ பைடனின் அரசு மனிதாபிமான நடவடிக்கையாக ‘சி.எச்.என்.வி’ என்ற திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி, மேற்கண்ட நாடுகளிலிருந்து வரும் மக்கள் ஒரு மாதத்துக்கு 30,000 பேர் என்ற விகிதத்தில் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மேற்கண்ட இடம்பெயர்ந்த மக்கள் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளை பறிப்பதாக டிரம்ப் நிர்வாகம் முக்கிய குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. இதனையடுத்து, ‘சி.எச்.என்.வி’ திட்டத்தின்கீழ் அமெரிக்காவுக்குள் வெளிநாட்டவர்கள் குடியேறுவதை தடை செய்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

இந்த நிலையில், ‘சி.எச்.என்.வி’ திட்டத்தின்கீழ் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தோருக்கு வழங்கப்பட்ட சட்ட அங்கீகாரம் செவ்வாய்க்கிழமை(மார்ச் 25) முதல் திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனையடுத்து, அவர்கள் அனைவரும் இடம்பெயர்ந்த மகக்ளுக்கான சட்டப்பூர்வ அனுமதியை புதிதாக பொறுப்பேற்றிருக்கும் டிரம்ப் அரசிடமிருந்து மீண்டும் பெற்றுக்கொள்ளவில்லையெனில் ஏப்ரல் 24-ஆம் தேதிக்குப் பின் அமெரிக்காவில் இருக்க அனுமதி மறுக்கப்படும்.

இதனிடையே, உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடர்ந்து, அந்நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்துள்ள சுமார் 2,40,000 உக்ரேனிய மக்களுக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள சட்ட அங்கீகாரத்தையும் ரத்து செய்ய டிரம்ப் ஆலோசித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போருக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளில் வலுக்கும் போராட்டம்!

இஸ்ரேல் - காஸா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி ஐரோப்பிய நாடுகளில் போராட்டம் வலுத்து வருகிறது. லண்டன், ஸ்பெயின்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் ஏராளமான மக்கள் அந்நாட்டுக் கொடிகள... மேலும் பார்க்க

அமெரிக்கா: நியூ மெக்சிகோ பூங்காவில் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி!

அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து அங்கிருந்தவர்கள் எடுத்த ... மேலும் பார்க்க

லெபனான் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு! 6 பேர் பலி; 4 மாதங்களில் மிகப்பெரிய தாக்குதல்

லெபனானின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தை உள்பட 6 பேர் பலியானதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லாக்களின் நிலைகள் மீது இஸ்ரேல் தினமும் தொடர்ந்து வான்வழி... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் இன்று டிஸ்சார்ஜ்!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமையான இன்று (மார்ச் 23) மருத்துவமனையிலிருந்து திரும்புவார் (டிஸ்சார்ஜ்) என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்து... மேலும் பார்க்க

இந்தியா-நியூஸிலாந்து உறவில் வலுவான வளா்ச்சி: பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன்

‘இந்தியா-நியூஸிலாந்து இடையிலான ஒத்துழைப்பு எனது இருதரப்பு பயணத்தின் போது இன்னும் வலுவாக வளா்ந்துள்ளது’ என்று நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ்டோபா் லக்ஸன் சனிக்கிழமை தெரிவித்தாா். நியூஸிலாந்து பிரதமராக கடந்... மேலும் பார்க்க

ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி லெபனானில் இஸ்ரேல் மீண்டும் தீவிர தாக்குதல்

தங்கள் நாட்டின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, லெபனானில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா படையினருக்கும் இடையே க... மேலும் பார்க்க