செய்திகள் :

துனிசியா: 2 ஆண்டுகளுக்குள் 3ஆவது பிரதமர் நியமனம்!

post image

துனிசியாவில் புதிய பிரதமராக சர்ரா ஜாஃபரானி நியமிக்கப்பட்டுள்ளார்.

துனிசியாவில் நிலவிவரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியால் துனிசியா பிரதமர் கமெல் மடௌரியை பதவி நீக்கம் செய்து துனிசியா அதிபர் கைஸ் சையத் உத்தரவிட்டார். அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய துனிசியா அதிபருக்கு முழு அதிகாரம் உள்ளது.

மேலும், பொதுப்பணித்துறை மற்றும் வீட்டுவசதி அமைச்சராக இருந்த சர்ரா ஜாஃபரானியை புதிய பிரதமராக நியமித்தார். இதன்மூலம், ஜாஃபரானி இரண்டு ஆண்டுகளுக்குள் துனிசியாவின் மூன்றாவது பிரதமராகவும், வரலாற்றில் நாட்டின் இரண்டாவது பெண் பிரதமராகவும் திகழ்கிறார்.

இதையும் படிக்க:இந்திய அரசுக்குத் தலைவலியாகும் மஸ்க்கின் குரோக் ஏஐ!

துணை-சஹாரா ஆப்பிரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பாவை அடையும் முயற்சியில் துனிசியாவுக்குள் செல்வதால், புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து, நெருக்கடி ஏற்படுவதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன.

இந்த நிலையில், துனிசியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்தாண்டில் 1.4 சதவிகிதத்தை தாண்டவில்லை என்றும், வட ஆப்பிரிக்க நாட்டின் பொது நிதி கடுமையான நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் அதிபர் கைஸ் சையத் கூறினார்.

அமெரிக்க கல்வித் துறையைக் கலைத்தார் டிரம்ப்!

அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் ஆவணங்களில் அதிபர் டொனால்டு டிரம்ப் வியாழக்கிழமை கையெழுத்திட்டார்.மேலும், கல்வித் துறையை மாகாணங்களின் பொறுப்புக்கு மாற்றியுள்ளார். இதனால், மத்திய கல்வித் துறை ஊழியர்... மேலும் பார்க்க

லண்டன் விமான நிலையம் இன்று இயங்காது! ஏன்?

உலகின் மிகவும் பரபரப்பான லண்டனின் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையம் இன்று(மார்ச் 21) நள்ளிரவு 11.59 மணிவரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விமான நிலையத்துக்கு மின்சாரம் விநியோகிக்கும் மின் நிலையத்தில் ... மேலும் பார்க்க

காங்கோ: கிளா்ச்சியாளா்கள் வசம் மேலும் ஒரு நகரம்

காங்கோவில் தாது வளம் நிறைந்த மேலும் ஒரு நகருக்குள் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் நுழைந்துள்ளனா். கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வாலிகலே என்ற அந்த நகரம் கிளா்ச்சியாளா்களிடம் வீழ்ந்ததை... மேலும் பார்க்க

இலங்கை: மே 6-இல் உள்ளாட்சித் தோ்தல்

இலங்கையில் நீண்டகாலமாக தடைபட்டிருந்த உள்ளாட்சித் தோ்தல் வரும் மே 6-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த நாட்டு தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது. கடந்த 2023-இல் உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்காக வேட்பு... மேலும் பார்க்க

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும்: டிரம்ப் நம்பிக்கை

‘அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா குறைக்கும் என நம்புகிறேன்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தாா். இந்தியா மீது வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் பரஸ்பர வரி விதிப்பு தொடங்கு... மேலும் பார்க்க

காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

காஸாவில் ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய மீண்டும் நடத்திய தாக்குதலில் 85 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது: காஸா முனை... மேலும் பார்க்க