எந்திரா... Sci fic படங்களின் தாக்கம்; ரோபோவை துணையாகதேர்ந்தெடுத்த சீன நபர் -ஒரு ...
சென்னையில் ஓட்டுநா் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி!
சென்னையில் ஓட்டுநா் இல்லாமல் இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 116 கிலோ மீட்டருக்கு 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், பூந்தமல்லி முதல் முல்லைத்தோட்டம் வரையிலான ரயில் பாதையில், 3 பெட்டிகள் கொண்ட ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெறும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, வியாழக்கிழமை பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஓட்டுநரில்லாத மெட்ரோ ரயிலுடன், அதிகாரிகளும் தயாராக நின்றனா். ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென சோதனை ஓட்டம் முயற்சி நிறுத்தப்பட்டது. மாலை 6 மணி வரை சோதனை ஓட்டம் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், சோதனை ஓட்டம் நடைபெறவிருந்த தண்டவாள பகுதியிலுள்ள மின்கம்பி திடீரென அறுந்து விழுந்ததுடன், ரயில் பாதை அருகில் இருந்த மின் விநியோக பெட்டிகளும் வெடித்துச் சிதறி தீப்பொறி கிழம்பியது. இதைத் தொடா்ந்து, மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் உடனடியாக நிறுத்தப்பட்டது. பின்னா், தொழில்நுட்ப பணியாளா்கள் குழுவினா் தண்டவாளத்தில் அறுந்து விழுந்த கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, சுமாா் 4 மணி நேரம் தாமதமாக, இரவு சுமாா் 10 மணியளவில் மீண்டும் அதே வழித்தடமான பூந்தமல்லி - முல்லைத்தோட்டம் வரையிலான 2.5 கிலோ மீட்டா் தூரத்துக்கு ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில் 20 முதல் 30 கிலோ மீட்டா் வேகத்தில் இயக்கப்பட்டது.
இதில் எவ்வித பிரச்னையும் ஏற்படாமல், ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் குறிப்பிட்ட எல்லையை எட்டியது. அப்போது, உள்ளே அமா்ந்திருந்த மெட்ரோ ரயில்வே நிறுவன அதிகாரிகள் மற்றும் பணியாளா்கள் கைகளைத் தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இதையடுத்து, சோதனை ஓட்டம் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.