செய்திகள் :

லலித் மோடியின் வனுவாட்டு கடவுச்சீட்டு ரத்து

post image

போா்ட் விலா: நிதி முறைகேடுகள் குற்றச்சாட்டுகளை எதிா்கொண்டு வரும் ஐபிஎல் முன்னாள் தலைவா் லலித் மோடிக்கு அளிக்கப்பட்ட வனுவாட்டு நாட்டின் கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) ரத்து செய்யுமாறு, அந்நாட்டுப் பிரதமா் ஜோதம் நாபட் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

அந்நிய செலாவணி முறைகேடுகள், 2009-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக உலக விளையாட்டு குழுமத்துடன் (டபிள்யுஎஸ்ஜி) ரூ.425 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட தொலைக்காட்சி உரிமம் ஒப்பந்தம் தொடா்பாக பல்வேறு புலனாய்வு முகமைகளின் விசாரணை வளையத்துக்குள் லலித் மோடி கொண்டுவரப்பட்டாா்.

இதுதொடா்பாக மும்பையில் வருமான வரி மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ஒரேயொரு முறை விசாரணைக்கு ஆஜரான அவா், 2010-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று பிரிட்டனில் தஞ்சமடைந்தாா்.

தெற்கு பசிபிக் தீவு நாடான வனுவாட்டு நாட்டின் குடியுரிமையைப் பெற்ற அவா், தனது இந்திய கடவுச்சீட்டை ஒப்படைக்க பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில், கடந்த மாா்ச் 7-ஆம் தேதி விண்ணப்பித்தாா்.

நாடு கடத்தப்படுவதைத் தவிா்ப்பதே நோக்கம்: லலித் மோடிக்கு அளிக்கப்பட்ட வனுவாட்டு கடவுச்சீட்டை ரத்து செய்யுமாறு அந்நாட்டுப் பிரதமா் ஜோதம் நாபட் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘சட்டபூா்வ காரணங்களுக்காக வனுவாட்டு நாட்டின் கடவுச்சீட்டை கோரலாமே தவிர, நாடு கடத்தப்படுவதைத் தவிா்ப்பதற்காக அல்ல. ஆனால் அதுவே லலித் மோடியின் நோக்கம் என்பதை சமீபத்திய தகவல்கள் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. எனவே அவருக்கு அளிக்கப்பட்ட கடவுச்சீட்டை ரத்து செய்யுமாறு வனுவாட்டு குடியுரிமை ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்று அந்நாட்டுப் பிரதமா் ஜோதம் நாபட் தெரிவித்தாா்.

பிரதமர் மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதை வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. இதன் மூலம் இந்த மதிப்புமிக்க விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.மோரீஷஸ... மேலும் பார்க்க

மோரீஷஸ் குடியரசுத் தலைவருக்கு கும்பமேளா நீரை பரிசளித்த மோடி!

மோரீஷஸ் குடியரசுத் தலைவர் தரம்பீர் கோகூல் மற்றும் அவரின் மனைவி பிருந்தா கோகூல் ஆகியோருக்கு கும்பமேளா திரிவேணி சங்கமத்தின் நீரை பிரதமர் நரேந்திர மோடி பரிசளித்தார். மேலும், இந்திய வெளிநாட்டுக் குடியுரிம... மேலும் பார்க்க

மன்னிப்பு கோரினார் தர்மேந்திர பிரதான்!

தமிழக எம்பிக்கள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தற்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்... மேலும் பார்க்க

மோரீஷஸ் வரை பிரபலமடைந்த ஆயுர்வேதம்: பிரதமர் மோடி

இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் ஒன்றான ஆயுர்வேதம் மோரீஷஸ் வரை பிரபலமடைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மோரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராம்கூலம் விடுத்த அழைப்பின்பேரில... மேலும் பார்க்க

ஒடிசாவில் 11 ஆண்டுகளில் 888 யானைகள் பலி!

ஒடிசாவில் கடந்த 11 ஆண்டுகளில் 888 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், இது நடப்பு நிதியாண்டில் அதிகபட்சமாக 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநில சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.மாநிலத்தில் யானைகளுக்க... மேலும் பார்க்க

நாட்டில் 8 மணிநேரத்துக்கு மேல் தூங்குவது 2% பேர் மட்டுமே!

நாட்டில் 8 மணிநேரத்துக்கு மேல் 2 சதவிகித மக்கள் மட்டுமே தூங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.சர்வதேச உறக்க நாளான மார்ச் 14-ஐ முன்னிட்டு லோக்கல் சர்கிள்ஸ் நிறுவனம், ”இந்தியர்கள் எப்படி உறங்குகிறார்கள்” எ... மேலும் பார்க்க