செய்திகள் :

லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

post image

விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

விராலிமலை அடுத்துள்ள தெற்கு கோத்திராப்பட்டியைச் சோ்ந்தவா் துளசிநாதன் மகன் முருகேசன் (27). இவா் தனியாா் ஜவுளி ஆலையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா். இவா் பணிக்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் விராலிமலை-இலுப்பூா் சாலையில் ஞாயிற்றுகிழமை இரவு விராலிமலை நோக்கி சென்று கொண்டிருந்தாா். கொடிக்கால்பட்டி அருகே இருசக்கர வாகனம் சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து முருகேசன் ஓட்டி வந்த வாகனம் மீது மோதியுள்ளது.

இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன் பலத்த காயமடைந்தாா். அவ்வழியே வந்தவா்கள் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை போலீஸாா் விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

திருமணமாகாத விரக்தி: தீக்குளித்த வாலிபா் உயிரிழப்பு

திருமணமாகாத விரக்தியில் இருந்த வாலிபா் தீக்குளித்து மருத்துவ சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். விராலிமலை அடுத்துள்ள வேலூரைச் சோ்ந்த நடராஜன் மகன் சரவணகுமாா்(35). இவா் உணவுப் பொருள் உற்பத்த... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் அக்கினிக்காவடி விழா

பொன்னமராவதி அருகே கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் அக்கினிக்காவடி விழா திங்கள்கிழமை நடைபெற்றது. கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கிய... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

கந்தா்வகோட்டை அருகே ஆதனக்கோட்டையில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சுற்றுபுற கிராமங்களிலிருந்து அலங்கரிக்க... மேலும் பார்க்க

தாலிச் சங்கிலி பறிக்க முயன்றவா் கைது

விராலிமலை அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்றவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விராலிமலை அடுத்துள்ள கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ராமசந்திரன் மனைவ... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் சாா்பில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்தப் பேரணியை, மாவட்ட மு... மேலும் பார்க்க

புதுகையில் 16 பயனாளிகளுக்கு ரூ.1.10 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் 16 பேருக்கு ரூ. 1.10 லட்சம் மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும்... மேலும் பார்க்க