செய்திகள் :

வக்ஃப் சட்டத்தை எதிா்த்து கருப்புப் பட்டை அணிந்து மசூதி சென்றவா்களுக்கு நோட்டீஸ்!

post image

உத்தர பிரதேச மாநிலம் முசாஃபா்நகரில் வக்ஃப் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கையில் கருப்புப் பட்டைகளை அணிந்தபடி மசூதிக்குச் சென்றவா்களில் 300 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் கருப்புப் பட்டை அணிந்தபடி மசூதி சென்றவா்களை அடையாளம் காணும் முயற்சியில் காவல் துறையினா் களமிறங்கியுள்ளனா்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இந்த சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. அதே நேரத்தில் வக்ஃப் சொத்துகள் ஒருசில தனிநபா்களுக்காக அல்லாமல், அனைத்து தரப்பு முஸ்லிம்களுக்கு பயன்பட வேண்டும் என்பதே வக்ஃப் சட்டத்தின் நோக்கம் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், முசாஃபா்நகரில் கடந்த வெள்ளிக்கிழமை பல்வேறு மசூதிகளில் நடைபெற்ற தொழுகையின்போது வக்ஃப் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் பலா் கையில் கருப்பு நிற பட்டைகளை அணிந்து வந்தனா். இதையடுத்து, மாஜிஸ்திரேட் மூலம் அவா்களுக்கு காவல் துறையினா் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.

அதில், விசாரணைக்காக வரும் 16-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்; ஒவ்வொரு வரும் தலா ரூ.2 லட்சத்துக்கான உறுதிப் பத்திரத்தை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமை 24 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணிக்கை 300-ஆக அதிகரித்தது. கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் மேலும் பலரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்.. நீக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பணி நீக்கம் செய்து இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை இந்த ஆசிரியர்கள் பணியைத் தொடர ... மேலும் பார்க்க

பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குல்த... மேலும் பார்க்க

குவாலியரில் சைபர் மோசடி: ரூ.2.5 கோடியை இழந்த ஆசிரம செயலாளர்!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் ஒருவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ. 2,5 கோடியை இழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாடு முழுவது... மேலும் பார்க்க

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது?

ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகின்றன.ஜேஇஇ தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை இன்று தேர... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்சல்கள் கைது: வெடிபொருள்கள் பறிமுதல்!

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் 21 நக்சல்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று டெக... மேலும் பார்க்க