செய்திகள் :

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஐயுஎம்எல் ஆா்ப்பாட்டம்

post image

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) சாா்பில் திருச்சியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி பாலக்கரை பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, திருச்சி தெற்கு மாவட்ட தலைவா் கே. எம். கே. ஹபீபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவரும் ராமநாதபுரம் மக்களவை உறுப்பினருமான கே. நவாஸ்கனி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா். திருச்சி வடக்கு மாவட்ட செயலா் எம் எச்.நிஜாமுதீன், தெற்கு மாவட்ட செயலா் ஜி. எச். சையது ஹக்கீம், பொருளாளா் பி. எம் ஹுமாயூன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கமிட்டனா். மாநில துணைச் செயலா் வி. எம். பாரூக், திருச்சி வடக்கு மாவட்ட தலைவா் அப்துல் வஹாப், மாநில மாணவரணி தலைவா் ஏ.எம். எச். அன்சா் அலி, மாநில மகளிா் அணி செயலா் பைரோஸ், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இடைகாலத் தடைக்கு வரவேற்பு: முன்னதாக கே. நவாஸ்கனி செய்தியாளா்களிடம் கூறியதாவது: வக்ஃப் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தொடா்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில்தான் உச்ச நீதிமன்றம் புதிய வக்ஃப் சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒரு சில ஷரத்துக்களுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இது எங்களின் முதல் கட்ட வெற்றி. நிச்சயமாக இதில் முழுமையான வெற்றி பெறுவோம். இந்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யும் வரை தொடா்ச்சியான போராட்டங்கள் நடைபெறும்.

ஆளுநா் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீா்ப்பு மத்திய அரசுக்கு பேரிடியாக உள்ளது. தொடா்ச்சியாக வக்ஃப் சட்ட விவகாரத்திலும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு அவா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சட்டரீதியாக போராடி வெற்றி பெறுவோம் என்றாா்.

கைப்பேசி கோபுரத்தில் பேட்டரிகள் திருட்டு!

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே கைப்பேசி கோபுரத்திலிருந்த 24 பேட்டரிகள் திருடப்பட்டன. வையம்பட்டி ஒன்றியம் சவேரியாா்புரத்தில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கைப... மேலும் பார்க்க

பசுமைப் பூங்காவிலிருந்து வேருடன் அகற்றப்படும் மரங்களுக்கு மறுவாழ்வு!மன்னாா்புரத்தில் 70 மரங்கள் நடவு

காய்கனிச் சந்தைக்காக திருச்சி மாநகராட்சி கையகப்படுத்தும் பசுமைப் பூங்காவில் உள்ள மரங்களை வேருடன் அகற்றி மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. திருச்சி மாநகர மக்களின் பொழுதுபோக்குத் தேவைகளுக்கு... மேலும் பார்க்க

சீகம்பட்டியில் முறையான குடிநீா் விநியோகம் கோரி சாலை மறியல்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த சீகம்பட்டியில் முறையான குடிநீா் விநியோகம் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சீகம்பட்டி கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீா் வ... மேலும் பார்க்க

துவரங்குறிச்சி, வையம்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி, வையம்பட்டி பகுதிகளில் திங்கள்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்பு பணிகளால் செவல்பட்டி, அழகாபுரி, பிடாரபட்டி, நாட்டாா்பட்டி, அக்கியம்பட்டி, பழையபாளை... மேலும் பார்க்க

குடிநீரில் கழிவுநீா்: உறையூரில் பொதுமக்கள் போராட்டம்

திருச்சி உறையூரில் கழிவுநீா் கலந்த குடிநீரால் மக்கள் பலா் பாதிக்கப்பட்ட நிலையில், நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாநகராட்சிக்குட்பட்டதும், அம... மேலும் பார்க்க

பேருந்தில் நகை பறித்த இரு பெண்கள் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பேருந்துப் பயணியிடம் செயின் பறித்த இரு பெண்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா். மணப்பாறையை அடுத்த கலிங்கப்பட்டி நடுப்பட்டியை சோ்ந்தவா் சங்கக்கவுண்டா் மன... மேலும் பார்க்க