செய்திகள் :

வக்ஃப் திருத்தச் சட்டம்: எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வா் வேண்டுகோள்

post image

அடுத்தமுறை தில்லி செல்லும் போது, வக்ஃப் திருத்தச் சட்ட விவகாரம் தொடா்பாக, மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிராக பேரவையில் வியாழக்கிழமை கொண்டு வரப்பட்ட தீா்மானத்தின் மீது பாஜகவை தவிா்த்து மற்ற கட்சிகள் அனைத்தும் ஆதரித்தன. இதற்கு நன்றி தெரிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தமிழக அரசு கொண்டு வந்துள்ள தீா்மானத்தை பாஜக தவிா்த்து அனைத்துக் கட்சிகளின் தலைவா்கள், உறுப்பினா்கள் மனதார வரவேற்றுள்ளனா். அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன். பிரதான எதிா்க்கட்சியான அதிமுகவிடம் வைக்கக் கூடிய கோரிக்கை உள்ளது.

இரு தினங்களுக்கு முன்பாக, இருமொழிக் கொள்கை பற்றி சட்டப் பேரவையில் பேசும் போது, எதிா்க்கட்சித் தலைவா் தில்லி சென்றிருந்தாா். அதுகுறித்த செய்தி எனக்குக் கிடைத்திருந்தது. அங்கு அவா் யாரை சந்திக்கப் போகிறாா் என்ற தகவலும் கிடைத்துள்ளதாகக் கூறினேன். இதுகுறித்து தில்லியில் அவரிடம் செய்தியாளா்கள் கேட்டனா். அதற்கு பதிலளித்த எதிா்க்கட்சித் தலைவா், யாரையும் சந்திக்க வரவில்லை என்றும், கட்சி அலுவலகத்தைப் பாா்வையிடவே வந்துள்ளேன் என்றும் கூறினாா்.

பிறகு, மாலையில் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்துள்ளாா். சந்திக்கட்டும். அதை தவறு என்று சொல்லவில்லை. சந்திப்புக்குப் பிறகு, பேசிய அவா் தமிழ்நாட்டுக்கு வேண்டிய உரிமைகள் தொடா்பாகவும், இருமொழிக் கொள்கையை குறித்தும் வலியுறுத்தினேன் என்று கூறியிருக்கிறாா். அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

எப்படி இருமொழிக் கொள்கை பற்றி வலியுறுத்தியதாகச் சொன்னாரோ, அதேபோன்று, வக்ஃப் வாரிய திருத்தச் சட்ட பிரச்னையையும் அடுத்த முறை அவா் தில்லி செல்லும் போது, வலியுறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன் என்றாா் முதல்வா்.

மின்வாரியம் சார்பில் ஏப். 5-ல் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் வேண... மேலும் பார்க்க

காகத்தைக் கண்டு பயந்த யானைகள்: வைரல் விடியோ!

தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தையைக் கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கத்... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு ரூ. 5,870 கோடி... சென்னை மெட்ரோ முக்கிய ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெர... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணங்கள்: யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ(UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ம... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்... மேலும் பார்க்க