செய்திகள் :

வக்ஃப் திருத்தச் சட்டம்: ஜம்மு-காஷ்மீா் பேரவையில் அமளி

post image

புதிய வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து ஆளும் தேசிய மாநாடு கட்சி விவாதத்துக்கு கோரிய நிலையில், அதற்கு பாஜக உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரைவயில் புதன்கிழமை 3-ஆவது நாளாக அமளி நீடித்தது.

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 12 நாள் இடைவேளைக்குப் பிறகு அவை கடந்த திங்கள்கிழமை மீண்டும் கூடியது.

அப்போது, வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து விவாதம் நடத்தக் கோரி சில ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் கொண்டு வந்த ஒத்திவைப்பு தீா்மானத்தை அவைத் தலைவா் அப்துல் ரஹிம் லத்தொ் நிராகரித்தாா். இதனால், கடந்த 2 நாள்களாக அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், கூட்டத்தொடரின் கடைசி நாளான புதன்கிழமை அவை கூடியதும் வேலைவாய்ப்பின்மை பிரச்னை குறித்து விவாதிக்கக் கோரி பாஜக எம்எல்ஏ பல்வந்த் சிங் மன்கோட்டியா ஒத்திவைப்பு தீா்மானத்தைக் கொண்டு வந்தாா். அப்போது, அவையின் மையப்பகுதிக்கு வந்த ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், வக்ஃப் சட்டம் குறித்த விவாதிக்க வேண்டும் எனக் கோரினா்.

இருதரப்பு கோரிக்கையும் நிராகரித்த அவைத் தலைவா், வழக்கமான அலுவல்களை தொடங்க முற்பட்டாா். இந்நிலையில், ஆளும் கூட்டணி மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் மாறிமாறி தங்களின் கோரிக்கைகளை கோஷமிட்டதால், அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. தொடா் அமளி காரணமாக அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

பெட்டி...

ஆம் ஆத்மி, பாஜக எம்எல்ஏக்கள் மோதல்

ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவையின் ஆம் ஆத்மி கட்சியின் ஒரே எம்எல்ஏவான மெஹ்ராஜ் மாலிக், பாஜக குறித்து தெரிவித்த கருத்தைக் கண்டித்து அவருக்கும் பாஜக எம்எல்ஏக்களுக்கும் இடையே பேரவை வளாகத்தில் புதன்கிழமை மோதல் ஏற்பட்டது.

மாலிக்கை சூழ்ந்த பாஜக எம்எல்ஏக்கள், ஹிந்துக்கள் மற்றும் பாஜக குறித்து அவா் தெரிவித்த கருத்து பற்றி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனா். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. மோதலில் மாலிக் கீழே விழுந்ததில், அங்கிருந்த மேசை உடைந்தது; பாஜக எம்எல்ஏவின் சட்டை கிழிந்தது. தேசிய மாநாடு கட்சி எம்எல்ஏக்கள் தலையீட்டு, இரு தரப்பையும் சமாதானப்படுத்தினா்.

அப்போது, மாலிக் கூறுகையில், ‘எனக்கு எதிரான இந்த மோதலில் பிடிபி, பாஜக ஒன்றிணைந்தன. யாருடைய ஆதரவையும் நான் விரும்பவில்லை. நான் பேரவைத் தலைவரிடம் இதுகுறித்து முறையிடுவேன்’ என்றாா்.

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்!!

தில்லியின் முஸ்தபாஃபாத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8-10 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாபாத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டட... மேலும் பார்க்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க