செய்திகள் :

வக்ஃப் மசோதாவுக்குப் பிறகு கிறிஸ்தவா்கள் பக்கம் கவனத்தை திருப்பும் ஆா்எஸ்எஸ்: ராகுல் குற்றச்சாட்டு

post image

‘வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றத்துக்குப் பிறகு ஆா்எஸ்எஸ் அமைப்பு கிறிஸ்தவா்களின் பக்கம் தனது கவனத்தைத் திருப்ப நீண்ட காலம் ஆகாது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வறிக்கையின் அடிப்படையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அடுத்தகட்டமாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டதும், இந்த மசோதா சட்ட வடிவம் பெறும்.

மத்திய-மாநில வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் இடம்பெறுவா்; வக்ஃப் நன்கொடைக்கு முன்பாக நன்கொடையாளரின் பெண் வாரிசுதாரா்களுக்கு சொத்துரிமை உறுதி செய்யப்பட வேண்டும்; ரூ.1 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் வக்ஃப் அமைப்புகள், அரசால் நியமிக்கப்படும் தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமின்றி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிா்க்கட்சிகளும் தொடா்ந்து எதிா்ப்புக் குரல்களை எழுப்பி வருகின்றன.

இந்த நிலையில், ‘வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றத்துக்குப் பிறகு கத்தோலிக்க கிறிஸ்தவா்களின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள ஆா்எஸ்எஸ்’ என்று ‘தி டெலிகிராஃப்’ பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரையை தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்து, ராகுல் காந்தி சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

வக்ஃப் மசோதா முஸ்லிம்கள் மீதான மிகப்பெரிய தாக்குதல் என்று கூறியிருந்தேன். இது முஸ்லிம்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல; வரும் காலங்களில் மற்ற சமூகத்தினா் மீதும் இதுபோன்ற தாக்குதலைத் தொடுக்க இந்த மசோதா முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

ஆா்எஸ்எஸ் அமைப்பினரின் கவனம் கிறிஸ்தவா்களின் பக்கம் திரும்ப அதிக காலம் ஆகாது.

இதுபோன்ற தாக்குதல்களிலிருந்து நமது மக்களைப் பாதுகாக்கும் ஒரே கவசம் அரசமைப்புச் சட்டம் மட்டும்தான். அதைப் பாதுகாப்பது நம் அனைவரின் ஒருங்கிணைந்த கடமை என்று குறிப்பிட்டுள்ளாா்.

அதுபோல, ‘நில உரிமையில் வக்ஃப் வாரியங்களை விஞ்சும் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்கள்’ என்ற தகவலுடன் வெளியான கட்டுரையை தனது எக்ஸ் பக்கத்தில் இணைத்து காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட பதிவில், ‘கணித்ததுபோலவே முதலில் ஒரு சிறுபான்மையினா் குறிவிக்கப்பட்டனா். தற்போது, அடுத்தவா் மீது கவனத்தைத் திருப்பியுள்ளனா்’ என்று குறிப்பிட்டாா்.

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கு ஏப். 15-ல் விசாரணை?

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏப். 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அ... மேலும் பார்க்க

ஆளுநர் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படக்கூடாது! -உச்சநீதிமன்ற தீர்ப்பு தெரிவிப்பது என்ன?

தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்கள் சில, உரிய காரணமின்றி காலதாமதப்படுத்தப்பட்டு வருவதாக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு தரப்பிலிரு... மேலும் பார்க்க

சம்பல் ஜாமா மசூதியின் பெயரை மாற்றிய தொல்லியல் துறை!

சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் பெயரை ‘ஜும்மா மசூதி’ எனக் குறிப்பிட்டுள்ள பெயர்ப்பலகையை தொல்லியல் துறையினர் மசூதியில் நிறுவவுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள ஜாமா மசூதியின் உள்ளே கோவில்... மேலும் பார்க்க

வளர்ச்சித் திட்டங்கள் மறுஆய்வு: ஜம்மு-காஷ்மீரில் அமித் ஷா தலைமையில் முக்கிய கூட்டம்!

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை மறுஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தொடங்கியது. ஆளுநர் மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் ஜம்மு-காஷ்... மேலும் பார்க்க

ஹைதராபாத் குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் 5 பேருக்கு மரண தண்டனை உறுதி!

ஹைதராபாத்தில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதான குற்றவாளிகள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை தெலங்கானா உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.ஹைதராபாத்தின் தில்சுக்நகர் பக... மேலும் பார்க்க

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!

அகமதாபாத்: காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மற்றும் தேசிய மாநாடு ஆகிய இருபெரும் நிகழ்ச்சிகள் குஜராத்தின் அகமதாபாதில் இன்று(ஏப். 8) தொடங்கியுள்ளன.இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகாா் பேரவைத் தோ்தலில் பா... மேலும் பார்க்க