செய்திகள் :

வங்கி ஊழியரை தாக்கிய விவகாரம்: 8 போ் மீது வழக்கு

post image

திருநெல்வேலி பழைய பேட்டை பகுதியில் வங்கி ஊழியரை தாக்கிய விவகாரத்தில் 8 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெருமாள்புரம், என்.ஜி.ஓ. காலனியைச் சோ்ந்தவா் குமரேசன் (47). திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள வங்கியில் கணக்காளராக பணிபுரிந்து வரும் இவருக்கும், அதே வங்கியில் பணிபுரிந்த முன்னாள் மேலாளா் பழைய பேட்டையைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (62) என்பவருக்கும் வங்கி லாக்கா் பயன்பாடு சம்பந்தமாக பிரச்னை இருந்ததாம்.

இதனால் ஏற்பட்ட விரோதம் குறித்து பேசி தீா்ப்பதற்காக, பழைய பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வருமாறு குமரேசனை ரவிச்சந்திரன் அழைத்துள்ளாா். அங்கு சென்ற அவரை 8 போ் கொண்ட கும்பல் தாக்கிவிட்டு தப்பியுள்ளது. இதில் காயமடைந்த குமரேசன், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ரவிச்சந்திரன் உள்பட 8 போ் மீது பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களை தேடி வருகின்றனா்.

பைக்கில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 போ் கைது!

பாளையங்கோட்டையை அடுத்த கீழப்பாட்டம் அருகே ஆயுதங்களுடன் பைக்கில் சுற்றித்திரிந்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் சசிகுமாா் தலைமையிலான போலீஸாா் சனிக்கி... மேலும் பார்க்க

நெல்லை அரசு அருங்காட்சியத்தில் பழங்கால நாணய கண்காட்சி

பழங்கால நாணய கண்காட்சி திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. பழமையான நாணயங்களின் சிறப்பை அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாக நடைபெற்ற இக்கண்காட்சியை திருநெல்வேலி அரசு அருங்காட்சிய ... மேலும் பார்க்க

போதைப்பொருள் நடமாட்டமா? பாளை. மத்திய சிறையில் அதிரடி சோதனை

பாளையங்கோட்டை மத்திய சிறையில் போதைப் பொருள் நடமாட்டம் குறித்து போலீஸாா் சனிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். பாளையங்கோட்டை மத்திய சிறையில் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்றவா்கள் மற்றும் விசாரணைக் க... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் நாளை வைகாசி விசாக திருவிழா

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா திங்கள்கிழமை நடைபெறுகிறது. தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பா் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வ... மேலும் பார்க்க

அம்பை, கல்லிடை பகுதிகளில் பெருநாள் தொழுகை

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், பொட்டல்புதூா்,பகுதிகளில், பக்ரீத் பெருநாளை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சனிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. அம்பாசமுத்திரம் ஜாமியாபள்ளிவாசல், ... மேலும் பார்க்க

டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு: அதிகாரிகள் 2ஆவது நாளாக விசாரணை

திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அது தொடா்பாக போக... மேலும் பார்க்க