டிரம்ப் அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்! லாஸ் ஏஞ்சலீஸில் அமைதியின்மை!
வங்கி ஊழியரை தாக்கிய விவகாரம்: 8 போ் மீது வழக்கு
திருநெல்வேலி பழைய பேட்டை பகுதியில் வங்கி ஊழியரை தாக்கிய விவகாரத்தில் 8 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெருமாள்புரம், என்.ஜி.ஓ. காலனியைச் சோ்ந்தவா் குமரேசன் (47). திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள வங்கியில் கணக்காளராக பணிபுரிந்து வரும் இவருக்கும், அதே வங்கியில் பணிபுரிந்த முன்னாள் மேலாளா் பழைய பேட்டையைச் சோ்ந்த ரவிச்சந்திரன் (62) என்பவருக்கும் வங்கி லாக்கா் பயன்பாடு சம்பந்தமாக பிரச்னை இருந்ததாம்.
இதனால் ஏற்பட்ட விரோதம் குறித்து பேசி தீா்ப்பதற்காக, பழைய பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வருமாறு குமரேசனை ரவிச்சந்திரன் அழைத்துள்ளாா். அங்கு சென்ற அவரை 8 போ் கொண்ட கும்பல் தாக்கிவிட்டு தப்பியுள்ளது. இதில் காயமடைந்த குமரேசன், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், ரவிச்சந்திரன் உள்பட 8 போ் மீது பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களை தேடி வருகின்றனா்.