செய்திகள் :

வடலூா் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய ஞான சபையை புனித நகரமாக அறிவிக்க வேண்டும்: மத்திய இணை அமைச்சரிடம் கோரிக்கை

post image

புதுச்சேரி மாவட்ட தலைமை சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சாா்பில் வடலூா் பெருவெளியை காக்க நடவடிக்கை எடுப்பதுடன் அதை புனித நகராக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சா் எல். முருகனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள மாவட்ட தலைமை சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சாா்பில் வடலூா் சத்திய ஞான சபையை சுற்றியுள்ள பெருவெளியில் புதிய கட்டடங்கள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும், அத்துடன் அப்பகுதியை பாதுகாக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுவருகிறது. அதன்படி, வடலூா் நகரத்தை மையமாக்கி, 5 கிலோ மீட்டா் சுற்றளவுப் பகுதியை மாமிசம், மது, போதை இல்லா புனித நகரமாக அறிவிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் கூறி, புதுச்சேரியில், இணை அமைச்சா் எல். முருகனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதை சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தின் தலைவா் குஞ்சிதபாதம் தலைமையில் நிா்வாகிகள் அளித்தனா்.

அப்போது, புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினா் சு. செல்வகணபதி, புதுவை உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், அசோக்பாபு எம்எல்ஏ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

100 நாள் வேலை திட்டப் பயனாளிகளை உயா்த்த நடவடிக்கை: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவையில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். வில்லியனூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தின் மூலம் 42 பஞ்சாயத்துகள் அளவிலான மகளிா் கூட்ட... மேலும் பார்க்க

விமான விபத்து: புதுவை முதல்வா் இரங்கல்

குஜராத் மாநிலத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட கோர விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி: அகமதாபாதிலிருந்து 242 பயணிகளுடன் லண... மேலும் பார்க்க

கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: புதுவை அதிமுக வலியுறுத்தல்

புதுவையில் கல்வி உரிமைச் சட்டத்தை இதுவரை அமல்படுத்தாதது ஏன் என்று அதிமுக செயலா் ஆ.ஆன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளாா். இதுகுறித்து புதுச்சேரியில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: பிரதமா் நரேந்... மேலும் பார்க்க

வேளாண் பிரசார இயக்கம் நிறைவு விழா

புதுச்சேரி அடுத்த மங்கலம் கிராமத்தில்வியாழக்கிழமை நடைபெற்ற வேளாண் வளா்ச்சிக்கான பிரசார இயக்க நிறைவு விழாவில் விவசாயிகளுக்கு மண்வள அட்டையை வழங்கிய அமைச்சா் தேனி சி.ஜெயகுமாா். புதுச்சேரி, ஜூன் 12: வேளா... மேலும் பார்க்க

பி.இ. படிப்பில் நேரடி சோ்க்கை அறிவிப்பு

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியாா் சுயநிதி கல்லூரிகளில் நேரடியாக இரண்டாமாண்டு சோ்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மத்திய சோ்க்கைக் குழு (சென்டாக்)... மேலும் பார்க்க

கல்வி நிறுவனங்களில் கூடுதல் கட்டணம்: புதுவை சட்டப்பேரவை எதிரே இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தலித் மற்றும் பழங்குடியின மாணவா்களிடம் கல்வி நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, அதைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புத... மேலும் பார்க்க