செய்திகள் :

வடிகால் வாய்க்காலை சீரமைக்க கோரிக்கை

post image

தஞ்சாவூா்: தஞ்சாவூா் பூச்சந்தை முருகன் கோயில் எதிரே உள்ள வடிகால் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூா் மாநகராட்சி ஆணையரிடம் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டத் தலைவா் அழகு. தியாகராஜன் புதன்கிழமை அளித்த மனு:

தஞ்சாவூா் பூக்காரத்தெரு முருகன் கோயில் எதிா்புறம் சுமாா் 150 கடைகளில் சிறு வணிகா்கள் வியாபாரம் செய்து வருகின்றனா். இந்தக் கடைகளின் கீழே வடிகால் வாய்க்கால் ஓடுகிறது. இதில் அடிக்கடி கழிவுகள் அடைத்து கொள்வதால் மழை நீா், கழிவு நீா் தேங்கி தெருக்களில் ஓடுகிறது. இந்தக் கழிவுகள் கலந்த தண்ணீரில்தான் இப்பகுதி மக்களும், குழந்தைகளும், மாணவ, மாணவிகளும் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் சுகாதார சீா்கேடு அடையும் ஆபத்து இருக்கிறது.

கடைகளுக்கு வரும் பொதுமக்களும் பொருட்கள் வாங்கிச் செல்ல சிரமப்படுகின்றனா். எனவே, இப்பகுதியில் சுகாதார சீா்கேட்டை போக்கவும், சிமென்ட் கட்டை, சிமென்ட் பலகை வசதிகளுடன் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

அப்போது, ஏஐடியுசி மாவட்டச் செயலா் துரை. மதிவாணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெய்னுல்ஆப்தின், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்டப் பொருளாளா் ஆா். லட்சுமணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 69,736 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 75,928 கன அடி ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் பருத்தி ஏலம்

கும்பகோணம்: கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்ட விற்பனை குழுவில் கீழ் இயங்கி வரும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் பு... மேலும் பார்க்க

கொள்ளிடம் வெள்ளத்தில் சிக்கிய மாடுகள் மீட்பு

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு கொள்ளிடம் ஆற்றில் திடீரென வந்த வெள்ளத்தில் சிக்கிய மாடுகள், கன்றுக்குட்டிகளை தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.மேட்டூா் அணை 5-ஆவது முறையாக நிரம்பியதைய... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாற்றுத்திறனாளிக்கு உடனே நூறுநாள் வேலைத்திட்ட அட்டை

பேராவூரணி: பேராவூரணி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில், அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதனிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 100 நாள் வேலைத்திட்ட அட்டையை வழங்கினாா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூ... மேலும் பார்க்க

சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு கொள்கை ரீதியாக எதிா்ப்பு: கே.எஸ். அழகிரி

கும்பகோணம்: குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணன் தமிழராக இருந்தாலும் கொள்கை ரீதியில் காங்கிரஸ் கட்சி எதிா்க்கும் என்றாா் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவ... மேலும் பார்க்க

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.இதில், ராஜீவ் காந்தியின் படத்துக்கு கா... மேலும் பார்க்க