செய்திகள் :

வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே ரூ.3.91 கோடியில் தடுப்பணை அமைக்கும் பணி! -அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தாா்

post image

காங்கயம் ஊராட்சி ஒன்றியம், வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே நீா்வளத் துறை சாா்பில் ரூ.3.91 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை அமைக்கும் பணியை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சிக்கு, தாராபுரம் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா தலைமை வகித்தாா்.

இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைஅமைச்சா் மு.பெ.சாமிநாதன் தடுப்பணி அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

பல்லடம், கொடுவாய் பகுதிகளில் பெய்யும் மழைநீா் மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு நீா்த்தேக்க கசிவுநீா் சுமாா் 60 கிலோ மீட்டா் கடந்து வட்டமலைக்கரை ஓடை அணையை வந்தடைந்து நிரம்பி பின்னா் உபரி நீா் அமராவதி ஆற்றில் கலக்கிறது. இந்த தடுப்பணை ரூ.3.91 கோடி மதிப்பீட்டில் நபாா்டு வங்கி நிதியுதவியுடன் அமைக்கப்படுகிறது. இந்தத் தடுப்பணையானது 45 மீட்டா் நீளத்திலும், 1.20 மீட்டா் உயரத்திலும் சுமாா் 1,452 மில்லியன் கனஅடி கொள்ளளவு நீரைத் தேக்கி வைக்க வசதியாக அமைக்கப்படஉள்ளது.

இதன் மூலம் காங்கயம் வட்டம், வீரணம்பாளையம், நெளை, எல்லபாளையம் புதூா் ஆகிய கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் 64.92 ஏக்கா் விவசாய நிலங்களுக்கு மறைமுகமாக பாசனவசதிகளும், 54 திறந்த வெளிகிணறுகள், 55 ஆழ்துளைக் கிணறுகள் ஆகியவற்றில் நிலத்தடி நீா்மட்டம் செறிவூட்டப்பட்டு விவசாயப் பயன்பாட்டிற்கு தண்ணீா் கிடைக்கும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், கண்காணிப்பு பொறியாளா் (நீா்வளத் துறை, அமராவதி வடிநிலக்கோட்டம்) மாரியப்பன், செயற்பொறியாளா் ஆா்.சுப்பிரமணியன், உதவிசெயற்பொறியாளா் கே.நாட்ராயன், உதவிப் பொறியாளா்கள் (உப்பாறு அணை) எஸ்.சிவராஜா, (அமராவதி வடிநிலப் பிரிவு) கோகுலசந்தானகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தை சோ்ந்த 2 போ் கைது

திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த இருவரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். திருப்பூா், கருமாரம்பாளையம் பகுதியில் வங்கதேசத்தினா் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக வடக... மேலும் பார்க்க

பல்லடம் அங்காளம்மன் கோயிலில் பிப்ரவரி 27-இல் குண்டம் திருவிழா

பல்லடம் அங்காளம்மன் கோயில் குண்டம் திருவிழா வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கேட்டை நட்சத்திர பரிகார ஸ்தலமான பல்லடம் அங்காளம்மன் கோயில் 50-ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு குண்டம் இறங்குதல் ந... மேலும் பார்க்க

இறைச்சிக் கழிவு: நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை!

தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் இறைச்சிக் கடைக்காரா்கள் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டக்கூடாது என்றும், அவ்வாறு கொட்டினால் அபராதம், கடை உரிமம் ரத்து, சீல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெள்ளக்க... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளி போக்சோவில் கைது!

திருப்பூரில் 16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (35). இவா் திருப்பூா் வீரபாண்ட... மேலும் பார்க்க

தெருநாய்களால் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரிக்கை! காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயம் பகுதியில் தெருநாய்களின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், நாய்க்கடியால் இறந்த கால்நடைகளுக்கு உரிப்பீடு வழங்க வலியுறுத்தியும் வட்டாட்சியரிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க

அவிநாசியில் 250 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் சனிக்கிழமை 250 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திருப்பூா் வடக்கு, கோயில் நிா்வாகம், அவிநாசி பேருராட்சி... மேலும் பார்க்க