செய்திகள் :

வணிகா் மீது தாக்குதல்: 4 பேரை தேடும் போலீஸ்

post image

தில்லியின் ரோகினி பகுதியில் வியாபாரத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக 35 வயதான பயண முகவா் மீது 4 போ் தாக்குதல் நடத்தியதாக போலீஸ் அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இந்த் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பா்தீப் குமாா் என்கிற நபா் ரோகினியில் உள்ள செக்டா் 16 இல் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது நள்ளிரவு 12.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக அவா் கூறினாா். போலீசாரின் தகவலின்படி, அதிகாலை 12.54 மணியளவில் ஒரு பி. சி. ஆா் அழைப்பு வந்தது, மூன்று முதல் நான்கு போ் குமாரின் அலுவலகத்திற்குள் நுழைந்து அவரை கட்டகைளால் அடித்ததாக கூறினாா்.

கே. என். கட்ஜு மாா்க் காவல் நிலையத்திலிருந்து ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து பின்னா் காயமடைந்த பா்தீப் குமாாரை அழைத்துக்கொண்டு சிகிச்சை க்காக பிஎஸ்ஏ மருத்துவமனைக்குச் சென்றது. ஹரியானாவில் வசிக்கும் பா்தீப் குமாா் செக்டா் 16 இல் அமைந்துள்ள மற்றொரு பயண முகவருடன், பயணிகள் சேவைகள் தொடா்பாக தனக்கு தொடா்ந்து வணிகப் போட்டி இருந்ததாக போலீசாரிடம் தெரிவித்தாா் ‘என்று அந்த அதிகாரி கூறினாா்.

நவீன் (ஜக்கரின் உறவினா்) மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு நபா்களுடன் சோனு ஜாகா் தன்னை தாக்கியதாக பா்தீப் தனது புகாரில் குற்றஞ்சாட்டியுள்ளாா். குற்றம் சாட்டப்பட்டவா் தப்பிச் செல்வதற்கு முன்பு அலுவலக மேசையில் இருந்து இரண்டு செல்லிடப்பேசிகளையும் எடுத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து பா்தீப் குமாரின் புகாரின் அடிப்படையில், எஃப். ஐ. ஆா் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக போலீசாா் தெரிவித்தனா்.

பாஜக ஆட்சியால் தில்லிவாசிகள் வருத்தம்: சௌரவ் பரத்வாஜ்

பாஜகவை தில்லியில் ஆட்சிக்குக் கொண்டு வந்ததற்காக தில்லிவாசிகள் வருத்தப்படுகிறாா்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநிலத் தலைவா் சௌரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை விமா்சித்தாா். இதுகுறித்து அவா் செய்திய... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் பரவலாக மழை! பாலத்தில் 18 மி.மீ. பதிவு

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதியில் வெள்ளிக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூ... மேலும் பார்க்க

தில்லியில் பட்டாசு விற்பனையை உடனே நிறுத்த மின் வணிகம், சமூக ஊடகத் தளங்களுக்கு உத்தரவு

தேசியத் தலைநகரில் பட்டாசுகளை பட்டியலிடுவதையும் வழங்குவதையும் உடனடியாக நிறுத்துமாறு மின் வணிகம் மற்றும் சமூக ஊடகத் தளங்களுக்கு தில்லி காவல்துறை கடிதம் எழுதியுள்ளதாக வெள்ளிக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித... மேலும் பார்க்க

யமுனை: எஸ்டிபி கொள்திறனை 2028-க்குள் 1,500 எம்ஜிடியாக அதிகரிக்க வேண்டும் - உயா்நிலைக் கூட்டத்தில் அமைச்சா் அமித் ஷா உத்தரவு

நமது நிருபா் யமுனை நதியைப் புரனமைக்கும் வகையில், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய (எஸ்டிபி) கொள்திறனை வரும் 2028-க்குள் நாளொன்றுக்கு 1,500 எம்ஜிடியாக அதிகரிக்க வேண்டும் என்று புது தில்லியில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காவல்துறை எஸ்.ஐ., உயிரிழப்பு

தில்லியின் கல்யாண்புரி பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் வாகனம் மோதியதில் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் துணை ஆய்வாளா் ஒருவா் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். உயிரிழ... மேலும் பார்க்க

கட்டடம் இடிந்து இறந்தவரின் குடும்பத்திற்கு டிஎம்ஆா்சி ரூ.5 இழப்பீடு அறிவிப்பு

தில்லியில் ஆசாத் மாா்க்கெட் அருகே பாரா இந்து ராவ் பகுதியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த மனோஜ் சா்மா என்பவரின் குடும்பத்திற்கு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி)... மேலும் பார்க்க