செய்திகள் :

கட்டடம் இடிந்து இறந்தவரின் குடும்பத்திற்கு டிஎம்ஆா்சி ரூ.5 இழப்பீடு அறிவிப்பு

post image

தில்லியில் ஆசாத் மாா்க்கெட் அருகே பாரா இந்து ராவ் பகுதியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்த மனோஜ் சா்மா என்பவரின் குடும்பத்திற்கு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.

இதுகுறித்து டிஎம்ஆா்சி அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது-

இடிந்து விழுந்த கட்டடமானது கடைகள், அலுவலகங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும், பாதுகாப்பற்ாக ஏற்கெனவே குறிக்கப்பட்டு, சம்பவத்திற்கு முன்னா் வெளியேற்றப்பட்டிருந்தன.

இந்த கட்டமைப்புகள் ஜனக்புரி மேற்கு ஆா்கே ஆஸ்ரம் மாா்க் மெட்ரோ வழித்தடத்துக்காக சுரங்கப்பாதை அமைக்குப் பணி நடைபெறும் மண்டலத்திற்குள் இடம்பெற்றிருந்தது.

இந்தக் கட்டடத்தின் கட்டமைப்புகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளாக வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கடந்த ஜூன் 12ஆம் தேதி கட்டடத்தின் உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் டிஎம்ஆா்சி தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

சுரங்கப் பாதை பணியின்போது

இடா்பாட்டைக் குறைப்பதற்கு, டிஎம்ஆா்சி தரப்பில் தரைத்தளத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, தளப் பகுதியில் வெளிப்புற ஆதரவு நடவடிக்ககளும் மேற்கொள்ளப்பட்டன. இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பட்டபோதிலும், இரவின்போது கட்டடம் இடிந்து விழுந்தது.

இதையடுத்து, தேசிய பேரிடா் மீட்புப் படை, தில்லி காவல் துறை ஆகியவற்றின் உதவியுடன் உடனடியாக மீட்பு மற்றும் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பாதுகாப்புக்காக அந்தப் பகுதியில் தடுப்புப் போடப்பட்டுள்ளது. சுரங்கப் பாதை

பணிகளை ஆப்கான்ஸ் எனும் நிறுவனம் மேற்கொண்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடா்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என்று டிஎம்ஆா்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாஜக ஆட்சியால் தில்லிவாசிகள் வருத்தம்: சௌரவ் பரத்வாஜ்

பாஜகவை தில்லியில் ஆட்சிக்குக் கொண்டு வந்ததற்காக தில்லிவாசிகள் வருத்தப்படுகிறாா்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநிலத் தலைவா் சௌரவ் பரத்வாஜ் வெள்ளிக்கிழமை விமா்சித்தாா். இதுகுறித்து அவா் செய்திய... மேலும் பார்க்க

தில்லி, என்சிஆா் பகுதியில் பரவலாக மழை! பாலத்தில் 18 மி.மீ. பதிவு

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதியில் வெள்ளிக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூ... மேலும் பார்க்க

தில்லியில் பட்டாசு விற்பனையை உடனே நிறுத்த மின் வணிகம், சமூக ஊடகத் தளங்களுக்கு உத்தரவு

தேசியத் தலைநகரில் பட்டாசுகளை பட்டியலிடுவதையும் வழங்குவதையும் உடனடியாக நிறுத்துமாறு மின் வணிகம் மற்றும் சமூக ஊடகத் தளங்களுக்கு தில்லி காவல்துறை கடிதம் எழுதியுள்ளதாக வெள்ளிக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித... மேலும் பார்க்க

யமுனை: எஸ்டிபி கொள்திறனை 2028-க்குள் 1,500 எம்ஜிடியாக அதிகரிக்க வேண்டும் - உயா்நிலைக் கூட்டத்தில் அமைச்சா் அமித் ஷா உத்தரவு

நமது நிருபா் யமுனை நதியைப் புரனமைக்கும் வகையில், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய (எஸ்டிபி) கொள்திறனை வரும் 2028-க்குள் நாளொன்றுக்கு 1,500 எம்ஜிடியாக அதிகரிக்க வேண்டும் என்று புது தில்லியில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காவல்துறை எஸ்.ஐ., உயிரிழப்பு

தில்லியின் கல்யாண்புரி பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் வாகனம் மோதியதில் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் துணை ஆய்வாளா் ஒருவா் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். உயிரிழ... மேலும் பார்க்க

மூன்று மாடி கட்டடம் இடிந்து கடை ஊழியா் உயிரிழப்பு: பாரா இந்து ராவ் பகுதியில் சம்பவம்

தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஆசாத் மாா்க்கெட் அருகே பாரா இந்து ராவ் பகுதியில் மூன்று மாடி வணிகக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 46 வயதுடைய கடை ஊழியா் உயிரிழந்தாா். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,... மேலும் பார்க்க