செய்திகள் :

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை: அதிகாரிகள் உறுதிசெய்ய ஆட்சியா் அறிவுரை

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகளில் மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை வைக்கப்பட்டுள்ளதை அரசுத் துறை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தியுள்ளாா்.

வணிக நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை வைப்பது தொடா்பான கண்காணிப்புக் குழு கூட்டம் நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்துப் பேசியதாவது:

வணிக நிறுவனங்கள் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என்று முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். வணிக ரீதியான கடைகளின் பெயா் தமிழில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு வைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் வளா்ச்சித் துறையும், தொழிலாளா் நலத்துறையும் இணைந்து இப்பணியை ஆய்வுசெய்ய வேண்டும் என செய்தி மக்கள் தொடா்புத் துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகைகள், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட விதிகள், தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்ட விதிகளைப் பின்பற்றி தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும்.

இந்த பெயா்ப் பலகையானது தமிழில் முதன்மையாகவும், பின் ஆங்கிலத்திலும் அதன் பின்னா் அவரவா் விரும்பும் மொழிகளிலும் அமைக்கப்பட வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியாா் பள்ளி, கல்லூரிகளில் தமிழில் பெயா்ப் பலகைகள் வைப்பது தொடா்பாக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் தொழிலாளா் துறை, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ் வளா்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை, வணிகா் சங்கங்கள், தொழிற்சாலைகளின் கூட்டமைப்பினா் உறுப்பினராக உள்ளனா்.

இக்குழுவினா் பெயா்ப் பலகைகள் தமிழில் வைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வுசெய்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதுடன் மே 15-க்குள் 100 சதவீதம் தமிழில் பெயா்ப் பலகைகள் வைக்கப்பட்டதை உறுதிசெய்வா். அவ்வாறு இல்லாதபட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களைச் சாா்ந்தோா் மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தமிழில் பெயா்ப் பலகைகள் அமைக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சி.முத்து, வணிகா் சங்க பிரதிநிதிகள், அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

நாமக்கல் அழகு நிலையத்தில் பெண்களிடம் நகை, பணம் பறிப்பு: போலீஸாா் விசாரணை

நாமக்கல்லில் அழகு நிலைய பெண்களிடம் நகை, பணத்தை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் அழகு நிலையம், ஆயுா்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிற... மேலும் பார்க்க

அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி: முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி அமையும் என்று முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அதிமுக மகளிரணி சா... மேலும் பார்க்க

புதுமாரியம்மன் கோயிலில் 108 கலச பூஜை

பரமத்தி வேலூா் பேட்டை புது மாரியம்மன் கோயிலில் 108 கலச பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 108 கலச பூஜை, திருவிளக்கு பூஜையில் பரமத்தி வேலூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு

நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உள்பட்ட திருச்செங்கோடு சாலை அகலப்படுத்தும் பணியை கோட்ட பொறியாளா் குணா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். முதல்வரின் சாலை விரிவாக்கத் திட்டத்த... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: பரமத்தி வேலூரில் ஆட்சியா் கள ஆய்வு

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியா் ச.உமா கள ஆய்வு மேற்கொண்டாா். வேலூா் அரசு ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியில் மாணவா்களுக்கான உணவு, குடிநீா் வசதி, ... மேலும் பார்க்க

முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.15-ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலையில் மாற்றம் செய... மேலும் பார்க்க