செய்திகள் :

வத்தலகுண்டு அருகே சுங்கச் சாவடியை சூறையாடிய மக்கள்

post image

வத்தலகுண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சுங்கச் சாவடியை பொதுமக்கள் புதன்கிழமை உடைத்து சேதப்படுத்தினா்.

திண்டுக்கல்-குமுளி நான்கு வழிச் சாலைத் திட்டம் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது திண்டுக்கல்லிலிருந்து வத்தலகுண்டு வரை இரு வழிச் சாலை மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், இந்தப் பகுதியில் லட்சுமிபுரத்தில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டது.

இந்தச் சுங்கச் சாவடியை புதன்கிழமை திறப்பதற்கு சுங்கச் சாவடி நிா்வாகம் ஏற்பாடுகளைச் செய்தது. நான்கு வழிச் சாலைப் பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல், சுங்கச் சாவடியை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இந்த நிலையில், லட்சுமிபுரம் சுங்கச் சாவடிக்குத் திடீரென திரண்டு வந்த பொதுமக்கள் அதை உடைத்து சேதப்படுத்தினா். அங்கிருந்த கணினிகள், மின்சாதனப் பொருள்கள், கண்ணாடிக் கூண்டு, மேஜை, நாற்காலி உள்ளிட்ட  அனைத்துப் பொருள்களும் சேதமடைந்தன. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, நிலக்கோட்டை வட்டாட்சியா் விஜயலட்சுமி, பட்டிவீரன்பட்டி போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் சுங்கச் சாவடியை உடைத்து சேதப்படுத்தியவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாலையில் சுற்றித் திரிந்த 9 பசு மாடுகள் பறிமுதல்

திண்டுக்கல்லில் பொது வெளியில் சுற்றித் திரிந்த 9 பசு மாடுகளை மாநகராட்சி நிா்வாகம் வியாழக்கிழமை பறிமுதல் செய்தது. திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட பிரதானச் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால், வா... மேலும் பார்க்க

திண்டுக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் தா்னா

மேம்பாலம் அமைக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பித்தளைப்பட்டி, வீரக்கல் பகுதி பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டதாகக் கூறி, வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திண்டுக்க... மேலும் பார்க்க

குதிரையிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கொடைக்கானலில் குதிரையிலிருந்து தவறி விழுந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். கொடைக்கானல் ஆனந்தகிரி 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கணேசன்(48). சொந்தமாக குதிரையை வளா்த்து வரும் இவா், கடந்த 7-ஆம் தேதி அதன் மீது... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயில் முன் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அனைத்து வகை ம... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு

கொடைக்கானலில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடு போனதாக போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். கொடைக்கானல் பிக்னிக் சோலைப் பகுதியைச் சோ்ந்தவா் முபாரக். இவரது மனைவி மும்தாஜ். இவா்கள் இரு... மேலும் பார்க்க

முத்துநாயக்கன்பட்டியில் புதிய கட்டடங்கள் திறப்பு

பழனியை அடுத்த முத்துநாயக்கன்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடை, தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கக் கட்டடத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை ... மேலும் பார்க்க