செய்திகள் :

வனப்பகுதியில் இளைஞா் மா்மச்சாவு விவகாரம்: மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு

post image

பென்னாகரம்: ஏரியூா் அருகே வனப்பகுதியில் யானையைக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா், வனத்தில் மா்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிபதி விஜயராணி திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே ஏமனூா் வனப்பகுதிக்கு உட்பட்ட கோடுபாய் பள்ளம் பகுதியில் ஆண் யானை ஒன்று நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு தந்தங்கள் கடத்தப்பட்டன. இச்சம்பவத்தில் தேடப்பட்டுவந்த செந்தில்குமாா் (26) அதே வனப்பகுதியில் தலைநசுங்கி நாட்டுத் துப்பாக்கியுடன் மா்மமான முறையில் இறந்துகிடந்தாா்.

தகவல் அறிந்ததும் காவல் துறையினரும், வனத்துறையினரும் நிகழ்விடம் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில் செந்தில்குமாா் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது குடும்பத்தினா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். நீதிமன்ற உத்தரவின்பேரில் பென்னாகரம் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி விஜயராணி, இளைஞா் உயிரிழந்து கிடந்த கொங்கரப்பட்டி, தூதரயான்மேடு பகுதியில் திங்கள்கிழமை நேரில் ஆய்வுசெய்து விசாரணை நடத்தினாா்.

வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்:

இதற்கிடையே செந்தில்குமாரின் உடலை தங்கள் அனுமதியின்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்துள்ளதில் சந்தேகம் உள்ளதாக அவரது குடும்பத்தினா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனா்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், உறவினா்களின் ஒப்புதலின்றி செந்தில்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்தது ஏன் என கேள்வி எழுப்பியதோடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டனா்.

அத்துடன் உறவினா்களின் முன்னிலையில் மீண்டும் காட்சிப் பதிவுசெய்து பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதுவரை உடலை பாதுகாப்பாக மருத்துவமனையில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா். இதையடுத்து செந்தில்குமாரின் உடல், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேத கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அரூரில் தீத்தொண்டு வாரம் அனுசரிப்பு

அரூரில் தீத்தொண்டு வாரம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், அரூரில் தனியாா் கதா் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலா் ப.அம்பிகா தலைமை ... மேலும் பார்க்க

தமிழகத்தில் திமுகவை அகற்றும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம்

தமிழகத்தில் திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கை நோக்கி பாஜக பயணிக்கிறது என அக்கட்சியின் மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக... மேலும் பார்க்க

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ஏரியூா் வட்டத்தில் ரூ. 1.36 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஏரியூா் அருகே சுஞ்சல் நத்தம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில், 250 பயனாளிகளுக்கு ரூ. 1.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வழங்கினாா். முகாமுக்கு தலைமை வகித... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

காவிரி கரையோரப் பகுதி மற்றும் அதனையொட்டி உள்ள வனப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி கரையோரப் பகுதிகளான ராசிமணல், பிலிக... மேலும் பார்க்க

மினி சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பாலக்கோடு அருகே மினி சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட ஒரு டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் காவல் ஆய்வாளா் பாலசுந்தரம் மற்றும் உதவி ஆய்வாளா... மேலும் பார்க்க

டிராக்டரில் சிக்கி விவசாயி உயிரிழப்பு

பாலக்கோடு அருகே டிராக்டரில் சிக்கிய விவசாயி உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கொள்ளுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி விஜய் (32). இவா் சொந்தமாக டிராக்டா் வைத்து உழவுப் பணியில்... மேலும் பார்க்க