செய்திகள் :

வரதட்சிணைக்காக மனைவி எரித்தே கொலை: “இதெல்லாம் சாதாரண விஷயம்” -கணவன் பதில்!

post image

மனைவி எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்தப் பெண்ணின் கணவனை 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

வட இந்தியாவில் தில்லியை அடுத்துள்ள உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியில் குடும்பம் நடத்தி வந்த விபின் - நிக்கி தம்பதியின் மண வாழ்க்கையில் வரதட்சிணைக்காக பெருந்துயரம் அரங்கேறியுள்ளது.

ரூ. 36 லட்சம் பணத்துக்காக மனைவியை விபின் எரித்துக் கொன்றதாகக் கூறப்படுகிறது. தனது அம்மாவை தன் கண் முன்னே விபின் எரித்துக் கொன்றதை பார்த்துக் கொண்டேயிருந்தேன் என்று இத்தம்பதியின் மழலை முகம் மாறா மகன் வாக்குமூலம் போன்று காவல் அதிகாரிகளிடம் தெரிவித்திருப்பது தலையில் இடியை இறக்குவதாய் அமைந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, வழக்கின் விசாரணையில் தப்பியோட முயற்சித்த விபின் பாத்தியா போலீஸாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.

மகனின் கண் முன் நடந்த கொடூரம்!

சம்பவம் நடந்த இடத்தில் விபின் - நிக்கி தம்பதியின் 6 வயது மகன் இருந்துள்ளார். அவரின் கண் முன்பே இந்தக் கொடூரம் நடந்துள்ளது.

அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அச்சிறுவன், அவர்கள் என் தாய் மீது எதையோ ஊற்றினார்கள். பின்னர் என் தந்தை அவரை கன்னத்தில் அறைந்து, லைட்டர் கொண்டு தீயிட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய நிக்கியின் தந்தை, முதலில் அவர்கள் ஸ்கார்ப்பியோ கார் கேட்டனர். அதனைக் கொடுத்தோம். பின்னர், புல்லட் பைக் கேட்டனர். அதனையும் கொடுத்தோம். ஆனால், தொடர்ந்து வரதட்சிணைக் கேட்டு என் மகளை அவர்கள் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

வலியை அனுபவித்து என் மகளின் உயிர் பிரிந்துள்ளது. அவர்கள் என் இளைய மகளைக் கொன்றுள்ளனர். இக்கொடுமைக்கு காரணமானவர்களை அரசு தண்டிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மனைவி இறந்ததைக் குறித்து கவலையில்லை!

விபின் பாத்தியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் செய்தியாளர்களுடன் பேசும்போது, “இதில் எனக்கு துளியும் மன வேதனை இல்லை. நான் அவளைக் கொல்லவில்லை. அவள் தாமாக முன்வந்து தற்கொலை செய்திருக்கிறாள்.

கணவன்மார்களுக்கும் அவர்தம் மனைவிமார்களுக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்படுவது சகஜம்தானே... இதெல்லாம் சாதாரண விஷயம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், ஆக. 21 ஆம் தேதி நடந்த இந்தக் கொடூர சம்பவம் குறித்து, காஞ்சன் அளித்த புகாரின்பேரிலேயே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து கணவர் விபினை கைது செய்தனர். அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

Greater Noida dowry case accused shows no remorse

அனில் அம்பானி ‘கடன் மோசடியாளா்’..! பாங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு!

தொழிலதிபா் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை ‘கடன் மோசடியாளா்’ என பாங்க் ஆஃப் இந்தியா வகைப்படுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இத... மேலும் பார்க்க

புதிய வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு: இந்தியா வெற்றிகரமாக சோதனை

இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பு(ஐ.ஏ.டி.டபிள்யூ.எஸ்.), ஒடிஸா கடற்கரையில் சனிக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்ப... மேலும் பார்க்க

மறைந்த சுதாகா் ரெட்டி உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம்!

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலருமான சுரவரம் சுதாகா் ரெட்டியின் உடல், மருத்துவ ஆய்வுக்காக ஹைதராபாத் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஞாயிற்றுக்கிழமை தானமாக வழங்க... மேலும் பார்க்க

இந்தியா தலைமையிலான புலி இனங்களைப் பாதுகாக்கும் கூட்டணியில் இணைந்த நேபாளம்!

புலி, சிங்கம் உள்பட 7 பெரிய பூனை இனங்களைப் பாதுகாக்கும் இந்தியா தலைமையிலான சா்வதேச பெரிய பூனைகள் கூட்டணியில் (ஐபிசிஏ) அண்டை நாடான நேபாளம் அதிகாரபூா்வமாக இணைந்துள்ளது. இதற்கான செயல்திட்ட ஒப்பந்தத்தில் ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் இளைஞா்களை அச்சுறுத்தும் மத அடிப்படைவாதம், போதைப் பழக்கம்! தனியாா் பள்ளிகளில் கண்காணிப்பு தீவிரம்!

ஜம்மு காஷ்மீரில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் இளைஞா்கள், மாணவிகள் மத்தியில் மத அடிப்படைவாத பிரசாரங்கள் அதிகரித்து வருவது பாதுகாப்பு முகமைகளுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளையில், இளைஞா்களிடையே ... மேலும் பார்க்க

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனை வெற்றி

‘ககன்யான்’ திட்டத்தில் விண்வெளி வீரா்கள் பூமிக்குத் திரும்பும் விண்கலத்தின் வேகத்தைக் குறைத்து, அவா்களை பாதுகாப்பாகத் தரையிறக்குவதற்கு முக்கியமான பாராசூட் அமைப்பின் முதல்கட்ட சோதனை (ஐஏடிடி-01) ஞாயிற்ற... மேலும் பார்க்க