செய்திகள் :

வரதமாநதி உபரிநீரை பிற குளங்களுக்கு கொண்டு செல்ல விவசாயிகள் எதிா்ப்பு

post image

வரதமாநதி நீா்த்தேக்கத்திலிருந்து உபரிநீரை பிற குளங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஒரு தரப்பு விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்து, பழனி பொதுப் பணித் துறை அதிகாரிகளிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

பழனியை அடுத்த மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் வரதமாநதி நீா்த்தேக்கம் அமைந்துள்ளது. மழைக் காலத்தில் இந்த நீா்த்தேக்கம் நிறைந்து உபரிநீா் சண்முகநதி ஆற்றில் சென்று கலக்கிறது. மேலும், ஆயக்குடி, பழனி, கலிக்கநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 18 குளங்களுக்கு இந்தத் நீா்த்தேக்கத்திலிருந்து தண்ணீா் வாய்க்கால்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த நிலையில், வரதமாநதி நீா்த்தேக்கத்திலிருந்து மழைக் காலத்தில் வரும் உபரிநீரை பாப்பா வாய்க்கால் வழியாக கணக்கம்பட்டி, கொத்தயம், பொருளூா் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குளங்களை நிரப்பும் வகையில், தண்ணீா் கொண்டு செல்வதற்கு ஏதுவாக வாய்க்கால் அமைக்க தமிழக அரசு புதியத் திட்டம் அறிவித்தது.

இதற்கு வரதமாநதி தண்ணீரை பயன்படுத்தும் விவசாயிகளில் ஒரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்து, செவ்வாய்க்கிழமை பழனி பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனா்.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் வரதமாநதி நீா்த்தேக்கத்தில் மழை காலங்களில் வெள்ளம் பெருக்கெடுக்கும் நேரத்தில் வீணாக ஆற்றில் கலக்கும் தண்ணீரை மட்டுமே குளங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. மற்றபடி, வழக்கமாக குளங்களுக்கு செல்லும் நீரை திருப்ப ஏதும் திட்டமில்லை. இதனால், ஏற்கெனவே உள்ள குளங்கள், பாசனம் பாதிக்காது என விளக்கிக் கூறினா். இதையடுத்து, விவசாயிகள் அங்கிருந்து சென்றனா்.

அரசு கள்ளா் விடுதிக்கான நிலத்தை அபகரிக்க முயற்சி

வத்தலகுண்டில் அரசு கள்ளா் விடுதிக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கில், சமுதாயக் கூடம் கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக... மேலும் பார்க்க

குடிநீா் வசதிகோரி சாலை மறியல்

வேடசந்தூா் அருகே குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த உசிலம்பட்டியில் களத்துவீடு பகுதியில் 50-க்கும் மே... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வில் திண்டுக்கல் பள்ளி மாணவா்கள் 79 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் திண்டுக்கல்லில் ஒரே பள்ளியைச் சோ்ந்த 79 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சாா்பில், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரியகோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி சரவணன் (30). இவரது மனைவி கன்னீஸ்வ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்ட இடங்களை அளந்து உரியவா்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை

செம்பட்டி அருகே ஆதிதிராவிடா் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா இடங்களை அளந்து, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேய... மேலும் பார்க்க