செய்திகள் :

வரியில்லாத புதுச்சேரி பட்ஜெட்: முதல்வர் என். ரங்கசாமி

post image

புதுச்சேரியின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் என். ரங்கசாமி புதன்கிழமையில் சட்டப்பேரவையில் சமர்ப்பித்தார். இந்த ரூ. 13,600 கோடி பட்ஜெட்டை வரியில்லாத பட்ஜெட் என்றும் கூறினார்.

மேலும், அவர் தெரிவித்ததாவது, ``மத்திய மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பாலும், ஒருங்கிணைந்த முயற்சிகளின் காரணமாகவும், நமது அரசு கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறான நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

யூனியன் பிரதேசத்தின் சொந்த வருவாய் வரவுகள் ரூ. 7,641,40 கோடி என்றும், மாநில பேரிடர் நிவாரண நிதி உள்பட மத்திய உதவி ரூ. 3,432.18 கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய சாலை நிதியாக ரூ. 25 கோடியும், மத்திய நிதியுதவி பெறும் திட்டத்தின்கீழ் ரூ. 400 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:புதுவை கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ. 1,000 ஊக்கத்தொகை!

நிதிப் பற்றாக்குறையின் இடைவெளியைக் குறைக்க ரூ. 2,101.42 கோடி அளவிலான பேச்சுவார்த்தை கடன் உள்பட நிகரக் கடன் உச்சவரம்புக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ரூ. 13,600 கோடி மதிப்பிலான பட்ஜெட்டில், வருவாய் செலவினங்களுக்காக ரூ. 11,624.72 கோடியும், மூலதன செலவினங்களுக்காக ரூ. 1,975.28 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-22 நிதியாண்டில் 1.66 சதவிகிதமாக இருந்த மூலதன செலவினம், இந்த பட்ஜெட்டில் 9.80 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 10 மடங்கு அளவிலான அதிகரிப்பாகும்.

நடப்பு நிதியாண்டில் பாலின வரவுசெலவுத் திட்டத்துக்கு ரூ. 1,458 கோடியும், இளைஞர் முன்முயற்சிகளுக்கு ரூ. 613 கோடியும், பசுமை திட்டங்களுக்கு ரூ. 689 கோடியும் உள்பட சிறப்பு வரவுசெலவுத் திட்டங்களுக்கு ரூ. 2,760 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது’’ என்று கூறினார்.

மராத்தியில் பேசுமாறு பஞ்சாயத்து அலுவலரைத் திட்டிய நபர் கைது!

கர்நாடக அரசு ஊழியரை மராத்தியில் பேசுமாறு தகாத வார்த்தைகளால் திட்டிய நபரைக் காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தில் திப்பன்னா சுபாஷ் டோக்ரே என்பவர் சொத்து தொடர்பான பிரச்சினைக்க... மேலும் பார்க்க

ஜக்கி வாசுதேவ் மீதான அவதூறு விடியோவை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜக்கி வாசுதேவ் மற்றும் அவரது ஈஷா அறக்கட்டளை மீது அவதூறு பரப்பும் விதமாக பத்திரிகையாளர் வெளியிட்ட விடியோவை நீக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்திரிகையாளரும் யூடியுபருமான ஷ்யாம் மீரா சிங் த... மேலும் பார்க்க

நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.61% ஆக சரிவு!

நாட்டின் சில்லறை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்து பிப்ரவரியில் 3.61 சதவீதமாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 4 சதவீதத்துக்கும் கீழாக சரிந்துள்ளது இதுவே முதல்முறையாகும். மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: தார்பாயால் மசூதிகளை மூட காவல்துறை உத்தரவு!

உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 10 மசூதிகளை தார்பாயால் மூட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரிதாக நடைபெறும் நிகழ்வாக ஹிந்துக்கள் கொண்டாடும் ஹோலி பண்டி... மேலும் பார்க்க

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு: யோகி ஆதித்யநாத்

ஹோலி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமரின் உஜ்வாலா யோஜனாவின் கீழுள்ள பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். லக்னௌவில் நடந்த மானி... மேலும் பார்க்க

தில்லி ஆளுநருக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெறும் புதிய பாஜக அரசு?

தில்லி ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு எதிரான வழக்குகளை தில்லியின் புதிய பாஜக அரசு வாபஸ் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தில்லியில் 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தபோ... மேலும் பார்க்க