செய்திகள் :

வரி ஏய்ப்பு புகார்: துல்கர் சல்மானின் 2 கார்கள் பறிமுதல்!

post image

நடிகர்கள் மம்மூட்டி, துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் இன்று(செப்.23) காலை சோதனை நடத்திய நிலையில், துல்கர் சல்மானின் 2 கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆபரேஷன் நும்கூர்

வரி செலுத்தாமல் உயர் ரக வாகனங்களை இறக்குமதி செய்யும் மோசடிகளை கண்டறிய நாடு முழுவதும் ‘ஆபரேஷன் நம்கூர்’ என்ற பெயரில் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கேரள மற்றும் லட்சத்தீவு சுங்க ஆணையரகத்தின் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில், கேரள மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 30 இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பணம்பிள்ளி நகரில் உள்ள துல்கர் சல்மான், தேவாராவில் உள்ள பிருத்விராஜ் மற்றும் எலம்குளத்தில் உள்ள மம்மூட்டி ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

துல்கர் வீட்டில் சோதனை

மலையாளம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் மிகவும் பிரபல நடிகரான துல்கர் சல்மான் நடிப்பு மட்டுமல்லாமல், தயாரிப்பிலும் அசத்தி வருகிறார். இந்த நிலையில், இன்று(செப்.23) காலை துல்கர் சல்மான், பிரித்விராஜ் மற்றும் மம்மூட்டி ஆகியோரின் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்ட சம்பவம் மலையாளத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கார் பறிமுதல்

இந்தச் சோதனையில், சட்டவிரோதமாக பூடானில் இருந்து துல்கர் சல்மான், பிரித்விராஜ் உள்ளிட்டோர் ராணுவத்தில் பயன்படுத்திய கார்களை வரி ஏய்ப்பு செய்து வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கொச்சியிலுள்ள இருவரது வீட்டிலும் கார் வாங்கிய ஆவணங்களையும், வரிதொடர்பான விஷயங்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.

பூடான் நாட்டின் வழியாக கார் இறக்குமதி செய்தததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து துல்கர் சல்மானின் பெயரில் உள்ள லேண்ட் ரோவர் டிஃபென்டர் கார் உள்பட இரண்டு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், கார் வாங்கியதற்கான முறையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Dulquer Salmaan’s luxury car seized by customs in Operation Numkoor

இதையும் படிக்க... பாடகர் ஸுபின் கர்க்கிற்கு லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை! இறந்த பின்னரும் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்!

தாதா சாகேப் பால்கே விருது: மலையாள சினிமாவுக்கு கிட்டிய கௌரவம் - மோகன்லால் நெகிழ்ச்சி!

மலையாள திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம்வரும் மோகன்லாலுக்கு திரைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை சிறப்பிக... மேலும் பார்க்க

நல்லதொரு மனிதரை இழந்து வாடுகிறேன்: ஷ்ரேயா கோஷால் உருக்கமான பதிவு!

நல்லதொரு மனிதரை இழந்து வாடுகிறேன் என்று பாடகி ஷ்ரேயா கோஷால் உருக்கத்துடன் தெரிவித்திருக்கிறார். வட இந்தியாவில் பிரபல பாடகராகப் புகழ்பெற்ற ஜுபின் கர்க் காலமானார். அவரது உயிர் சனிக்கிழமை(செப். 20) பிரிந... மேலும் பார்க்க

மண்டோதரி கதாபாத்திரத்தில் பூனம் பாண்டே: பாஜகவிலிருந்து வலுக்கும் எதிர்ப்பு!

ராவணன் மனைவி மண்டோதரியாக ஹிந்தி நடிகை பூனம் பாண்டே நடிப்பதற்கு பாஜகவிலிருந்து எதிர்ப்பு வலுத்துள்ளது.தில்லியில் புகழ் பெற்ற நாடக சபையான ‘ராம் லீலா குழு’ பிரபல ஹிந்தி நடிகை பூனம் பாண்டேவை ராமாயண காதை ந... மேலும் பார்க்க

மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது!

மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட உள்ளது. 65 வயதான மோகன்லால் திரைத்துறையில் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். இந்த நிலையில், மோகன்லாலுக்கு செப். 23-இல... மேலும் பார்க்க

பவன் கல்யாணின் ‘ஓஜி’ 1 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி! டிக்கெட் விலை ரூ.1000!

பவன் கல்யாணின் ‘ தே கால் ஹிம் ஓஜி’ திரைப்படத்தின் 1 மணி சிறப்புக் காட்சிக்கு ஆந்திர மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.ஆந்திர துணை முதல்வரான பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொ... மேலும் பார்க்க

கிஸ் படத்தின் இசை வெளியீடு!

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் படத்தை தயாரித்துள்ள நிலையில், கிஸ் படத்தின் கவின் நாயகனாக நடித்துள்ளார்.நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்த நிலையில் ஜென் மார்டின் இசையமை... மேலும் பார்க்க