செய்திகள் :

வருங்கால வைப்பு நிதி: 5 கோடி கேட்புகளுக்கு ரூ. 2 லட்சம் கோடி வழங்கல்

post image

‘வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) 2024-25 நிதியாண்டில் சாதனை அளவாக 5 கோடி கேட்புகளுக்கு நிதி வழங்கி தீா்வளித்துள்ளது’ என்று மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

வருங்கால வைப்பு நிதி அமைப்பு நிகழாண்டில் 5 கோடி கேட்புகளுக்கு ரூ. 2,05,932.49 கோடி நிதியை வழங்கி தீா்வளித்துள்ளது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் கூடுதலாகும். கடந்த 2023-24 நிதியாண்டில் 4.45 கோடி கேட்புகளுக்கு ரூ. 1,82,838.28 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

கேட்புகளுக்கு விரைந்து முழுமையான நிதியை அளித்து தீா்வளிக்கும் வகையில், இபிஎஃப்ஓ சாா்பில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கபூா்வமான சீா்திருத்தங்களே இந்த முன்னேற்றத்துக்குக் காரணம். கேட்புகளை சமா்ப்பித்த 3 நாள்களுக்குள் நிதியை வழங்கும் வகையில் கேட்புகளுக்கு தானியங்கி தீா்வளிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மூலம், கேட்புகளுக்கு தீா்வளிப்பது இரு மடங்காக உயா்ந்துள்ளது என்றாா்.

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை கோரிய மனு ஏற்பு!

கொல்கத்தா ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்கக்கோரி சிபிஐ தாக்கல் செய்த... மேலும் பார்க்க

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு! வீடு, வாகனக் கடன் வட்டி குறைகிறது!

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்து 6.25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.ரெப்போ வட்டி விகிதம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோ... மேலும் பார்க்க

வயநாட்டில் இறந்த கிடந்த 3 புலிகள்: வனத்துறை தீவிர விசாரணை

வயநாடு: வயநாடு கூட்டமுண்டா எஸ்டேட் பகுதி மற்றும் மயக்கொல்லி வனப்பகுதியில் 3 புலிகள் இறந்ததை அடுத்து வனத்துறையின் 8 பேர் கொண்ட குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது. கேரளம் மாநிலம் வயநாடு மேப்பாடி அருகே க... மேலும் பார்க்க

தில்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லி, நொய்டா பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையடுத்து தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. தலைநகர் தில்லியில் மயூர் விஹார் பகுதியில் உள்ள ஆல்கான் சர்வதேச பள்ளிக்கு மின்ன... மேலும் பார்க்க

பினாகா ராக்கெட் அமைப்பு: பாதுகாப்பு அமைச்சகம் ரூ.10 ஆயிரம் கோடி ஒப்பந்தம்

பினாகா ராக்கெட் ஏவும் அமைப்பை மேம்படுத்தி தாக்கும் திறனை அதிகரிப்பதற்காக ரூ.10,147 கோடி மதிப்பீட்டிலான ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை மேற்கொண்டது. இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெள... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவுக்காக பாகிஸ்தான் ஹிந்துக்கள் இந்தியா வருகை!

பிரயாக்ராஜ் : உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்க பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சோ்ந்த 68 ஹிந்துக்கள் கொண்ட குழு இந்தியா வந்துள்ளனா். இதில் குறைந்தது 50 ப... மேலும் பார்க்க