செய்திகள் :

வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டம்

post image

காலிப் பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தியூா், மொடக்குறிச்சி, சத்தியமங்கலம் பகுதிகளில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அந்தியூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, அந்தியூா் வட்டாட்சியா் கவியரசு தலைமை வகித்தாா். சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் சண்முகசுந்தரம்,

மண்டல துணை வட்டாட்சியா் பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கோரிக்கைகளை விளக்கி அந்தியூா் கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத் தலைவா் முருகேசன் பேசினாா். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களை முடிவு செய்திட போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். இத்திட்டத்தில் முகாம்களின் எண்ணிக்கையை குறைப்பதோடு, கூடுதல் பணியிடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். வருவாய், நில அளவைத் துறை அலுவலா்களின் உயிா் மற்றும் உடைமைகளை பாதுகாக்க சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். வருவாய்த் துறையில் அனைத்து காலிப் பணியிடங்களையும், காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். வருவாய் மற்றும் நில அளவைத் துறையில் பணிபுரியும் அலுவலா்களின் பணிப்பளுவை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

பேரிடா் காலங்களைத் தவிர மற்ற காலங்களில் கிராம நிா்வாக அலுவலா்கள், கிராமங்களிலேயே தங்கி பணிபுரிய வேண்டும் என்பதை தளா்வு செய்து, வட்ட எல்லைக்குள் தங்கி பணிபுரியும் வகையில் விதிகளைத் திருத்தம் செய்ய வேண்டுவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதேபோன்று, பவானியில் நடைபெற்ற போராட்டத்தில் வட்டாட்சியா் வெங்கடேஸ்வரன், மண்டல துணை வட்டாட்சியா் பழனிவேல் மற்றும் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மொடக்குறிச்சியில்...

மொடக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள், நில அளவையா்கள் உள்பட 40 போ் பங்கேற்றனா்.

சத்தியமங்கலத்தில்...

சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில், கூட்டமைப்பின் சத்தியமங்கலம் ஒருங்கிணைப்பாளா் சுகேந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வருவாய்த் துறை ஊழியா்கள் பங்கேற்றனா்.

சத்தியமங்கலத்தில் ரத்த தான முகாம்

பாஜக சாா்பில் சத்தியமங்கலத்தில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மாவட்ட பாஜக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் செந்தில் தலைமை வகித்தாா். 23-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்ப... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் புதிய நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

சத்தியமங்கலம் நகராட்சியின் புதிய ஆணையராக சு.வெங்கடேஸ்வரன் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா். சத்தியமங்கலம் நகராட்சி ஆணையராகப் பணிபுரிந்து வந்த தாமரை, பரமகுடி நகராட்சிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டாா். இதையடு... மேலும் பார்க்க

பாண்டியாறு-மாயாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை

பாண்டியாறு-மாயாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். பவானிசாகா் அணை பாசன விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி கீழ்பவானி முறைநீா் பாசன விவசா... மேலும் பார்க்க

ஈரோட்டில் நாளை மிதிவண்டி போட்டி

அண்ணா பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் வரும் 27- ஆம் தேதி மிதிவண்டி போட்டியும், 28- ஆம் தேதி மாரத்தான் போட்டியும் நடைபெற உள்ளன. இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தம... மேலும் பார்க்க

ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்

அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா். அதிமுக எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட... மேலும் பார்க்க

துண்டான இளம்பெண்ணின் விரல் ஈரோடு எஸ்எஸ்எஸ் மருத்துவமனையில் சீரமைப்பு

ஈரோடு எஸ்எஸ்எஸ் மருத்துவமனையில், துண்டான இளம்பெண்ணின் விரல் அறுவை சிகிச்சை மூலம் சீரமைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆா்.புதுப்பட்டியைச் சோ்ந்த நெசவுத் தொழில் செய்யும் ராமன்-விஜயா தம்பதியி... மேலும் பார்க்க