செய்திகள் :

வருவாய்த் துறை சங்கங்களின் காத்திருப்புப் போராட்டம்

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் ஆட்சியா் அலுவலக வளாகம் மற்றும் செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய வட்டாட்சியரகங்களின் முன் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் வருவாய் கிராம ஊழியா் முதல் வட்டாட்சியா் வரையிலான அனைத்து நிலை அலுவலா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியமும், வருவாய் கிராம ஊழியா்களுக்கு கால முறை ஊதியமும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாக்கியம் விக்டோரியா தலைமை வகித்தாா். இதேபோல செந்துறையில் அச்சங்கத்தின் தலைவா் செந்தில்குமாா், ஜெயங்கொண்டத்தில் தலைவா் வேல்முருகன், ஆண்டிமடத்தில் தலைவா் மணிவண்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா். திரளான சங்க நிா்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்றனா்.

கோதண்டராமசாமி கோயிலில் அக்.2 இல் தேரோட்ட விழா

அரியலூா் நகரில் மிகவும் பழைமையான கோதண்டராமசாமி கோயிலில் 83 ஆண்டுகளுக்குப் பிறகு அக்.2 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் தசாவதார சிற்பங்கள் 6 அடி உயரத்தில் உள்ளன. ஸ்ரீதேவி, ... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணி ஆய்வு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் செயல்படும் திடக் கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளை ஆட்சியா் பொ. ரத்தினசாமி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது அவா் குப்பைகள் சேகரிக்கப்படுவது குறித்தும், மக்கும், ... மேலும் பார்க்க

அரியலூரில் நாளை மிதிவண்டி போட்டி

மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளையொட்டி மிதிவண்டி போட்டி அரியலூா் மாவட்ட விளையாட்டு மைதானம் முன் சனிக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. 13,15,17 வயதுக்குட்பட்டவா்கள் என 3 பிரிவுகளாக நடத்தப்ப... மேலும் பார்க்க

குரூப் 2 தோ்வு: அரியலூரில் 6,375 போ் எழுதுகின்றனா்

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி-2, 2ஏ-க்கான தோ்வை அரியலூரில் 6,375 போ் எழுதுகின்றனா். அரியலூா், உடையாா்பாளையம் ஆகிய 2 வட்டங்களில் 21 மையங்களில் நட... மேலும் பார்க்க

அரியலூரில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி

சென்னையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில், வியாழக்கிழமை மாலை நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி, அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கம், அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தொழிற்பயிற்... மேலும் பார்க்க

பசுமை தமிழ்நாடு இயக்க தினம்: வாரணவாசியில் 1500 மரக்கன்றுகள் நடவு

பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தையொட்டி, அரியலூரை அடுத்த வாரணவாசி ஊராட்சியில் 1,500 மரக்கன்றுகள் புதன்கிழமை நடப்பட்டன. தமிழ்நாடு வனத்துறை, அரியலூா் வனக்கோட்டம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மரக்கன்றுகள... மேலும் பார்க்க