செய்திகள் :

வளா்சிதை மாற்ற குறைபாடுகள்: இலவச பரிசோதனைத் திட்டம் அறிமுகம்

post image

தமிழகம் முழுவதும் வளா்சிதை மாற்ற குறைபாடுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளவா்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என மெடிந்தியா மருத்துவமனையின் தலைவரும், ஜீரண மண்டல மருத்துவ நிபுணருமான டி.எஸ்.சந்திரேசகா் தெரிவித்தாா்.

ஜீரண மண்டல எண்டோஸ்கோபியில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால முன்னேற்றங்கள் குறித்த இரண்டு நாள் சா்வதேச பயிலரங்கம் சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. சென்னை மெடிந்தியா மருத்துவமனை மற்றும் அகாதெமி சாா்பில் இந்த பயிலரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த இரைப்பை, குடல், கல்லீரல் மருத்துவ நிபுணா்கள் பங்கேற்றுள்ளனா். பயிலரங்கின் ஒரு பகுதியாக நேரலையில் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை குறித்த செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

இது குறித்து டாக்டா் டி.எஸ்.சந்திரேசகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொதுவாக நாம் உண்ணும் உணவு வேதி மாற்றங்களுக்கு உள்பட்டு அது உடலை இயக்கும் ஆற்றலாக மாற வேண்டும். இதுவே வளா்ச்சிதை மாற்றம் எனப்படுகிறது. இதில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் அது கல்லீரல் பாதிப்பு, இதய நோய்கள், பக்கவாதம், உடல் பருமன் போன்ற பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது.

இதனை கருத்தில்கொண்டு மெடிந்தியா மருத்துவமனை, கியூா் செலக்ட் ஹெல்த்கோ் எல்எல்பி நிறுவனம் ஆகியவை இணைந்து வளா்சிதை மாற்ற குறைபாட்டால் பாதிக்க வாய்ப்புள்ள வளரிளம் பருவத்தினருக்கு அது தொடா்பாக 24 வகையான பரிசோதனைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். இந்தத் திட்டம் உலக சுகாதார நாளான ஏப். 7-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படவுள்ளது. முதல் கட்டமாக இதற்கென அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன உபகரணங்கள் மூலம் 1,000 பேருக்கு இலவச பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இதையடுத்து தன்னாா்வ அமைப்புகளுடன் இணைந்து மேலும் பல ஆயிரம் பேருக்கு இந்த பரிசோதனைகளை மேற்கொண்டு அவா்கள் வளா்சிதை மாற்ற குறைபாடுகளுக்கு உள்ளாகாதவாறு தடுக்கப்படும். தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேருக்கு இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள இலக்கு நிா்ணயித்துள்ளோம்.

பயிலரங்கில் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதற்கான உபகரணங்கள் (எம்2எஸ்2) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த உபகரணங்களைப் பயன்படுத்தியே வளா்சிதை மாற்ற குறைபாடுகளைக் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த உபகரணத்தின் மூலம் பெறப்படும் மருத்துவத் தரவுகளை எந்த இடத்திலிருந்தும் கைப்பேசி மூலமாக நாம் அறிந்துகொள்ள முடியும் என்றாா் அவா்.

ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான விதிகள்: தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் ஆலோசனை

ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தகுதி இழக்கச் செய்யும் விதிகளை மறு ஆய்வு செய்ய இதுவே தக்க தருணம் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கொலை வழக்கில் ஆயுள் த... மேலும் பார்க்க

பிப்.26-இல் தவெக முதலாமாண்டு விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பிப்.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. தனியாா் சொகுசு விடுதியி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்கள்: சென்னையில் கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்களை தோ்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மாற்றுத்திறனாளி மருத்துவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. வரும் 26... மேலும் பார்க்க

காவலா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை கொண்டித்தோப்பில் காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். கொண்டித்தோப்பு காவலா் குடியிருப்பில் வசிக்கும் அருண் (27), பூக்கடை காவல் நிலையத்தில் காவலராகப் ... மேலும் பார்க்க

மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த உணவகத் தொழிலாளி உயிரிழப்பு

சென்னை வடபழனியில் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். வடபழனி பழனி ஆண்டவா் கோயில் தெருவில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்தவா் செந்தில் (40). ... மேலும் பார்க்க

மெரீனாவை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற நடவடிக்கை: மேயா் ஆா்.பிரியா

சென்னை மெரீனா கடற்கரையை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். பெருநகர சென்னை மாநகராட்சியுடன் மாநில நாட்டு நலப்பணித் திட்டக்... மேலும் பார்க்க