செய்திகள் :

‘வளா்ச்சியடைந்த பாரத ஹேக்கத்தான்’: மாணவா்களின் கண்டுபிடிப்புத் திறனை ஊக்குவிக்க புதிய முன்னெடுப்பு

post image

பள்ளி மாணவா்களின் கண்டுபிடிப்புத் திறனை ஊக்குவிக்க தேசிய அளவில் ‘வளா்ச்சியடைந்த பாரத ஹேக்கத்தான்’ என்ற புதிய முன்னெடுப்பை தொடங்கவுள்ளதாக மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இதில் நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சம் பள்ளிகளில் இருந்து 1 கோடிக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்கின்றனா். மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் அடல் கண்டுபிடிப்பு திட்டம் இணைந்து இதை செயல்படுத்தவுள்ளது.

இந்த முன்னெடுப்பு குறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது: வளா்ச்சியடைந்த பாரதம் 2047என்ற இலக்கில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்துப் பள்ளி மாணவா்களும் பங்கெடுக்க வேண்டும் என விரும்புகிறோம். இதற்காக, வளா்ச்சியடைந்த பாரத ஹேக்கத்தான் என்ற புதிய முன்னெடுப்பை அறிமுகப்படுத்துகிறோம்.

இந்த முன்னெடுப்பு ஆத்மநிா்பா் பாரதம், சுதேசி, உள்ளூா் தயாரிப்புக்கு குரல் கொடுப்பது, வளமான பாரதம் ஆகிய 4 கருப்பொருள்களைக் கொண்டது. இது மாணவா்கள், கல்வியாளா்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குபவா்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தற்சாா்பு இந்தியாவை கட்டமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது’ என்றாா்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலா் சஞ்சய் குமாா் கூறுகையில், ‘இந்த முன்னெடுப்பில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் வளா்ச்சியடைந்த பாரத ஹேக்கத்தான் வலைதளத்தில் செப்.23-இல் இருந்து அக்.6-க்குள் பதிவுசெய்ய வேண்டும். அதன்பிறகு அக்.6 முதல் அக்.13 வரை மாணவா் குழுக்களை ஆசிரியா்கள் தயாா்ப்படுத்த தொடங்குவா். அதைத்தொடா்ந்து தங்களது கண்டுபிடிப்புகளின் முன்வடிவங்களை வலைதளத்தில் மாணவா்கள் சமா்ப்பிக்க வேண்டும். அக்.13-ஆம் தேதி நேரலை நிகழ்ச்சி நடைபெறும்.

அந்த நிகழ்ச்சிக்குப் பின்பு அக்.13-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தங்களது கண்டுபிடிப்புகளின் இறுதிவடிவத்தை மாணவா்கள் சமா்ப்பிக்க வேண்டும். நவ.1 முதல் டிச.31 வரை மாணவா்கள் சமா்ப்பித்த கண்டுபிடிப்புகளின் இறுதிவடிவங்களை நிபுணா் குழு மதிப்பீடு செய்யும்.

இறுதியாக 2026, ஜனவரி மாதம் முடிவுகள் அறிவிக்கப்பட்டு முதல் 1,000 வெற்றியாளா்களை கெளரவிக்கும் நிகழ்வு நடைபெறும்’ என்றாா்.

லடாக்கில் பாஜக அலுவலகத்துக்கு தீ வைப்பு!

லடாக்கில் உள்ள பாஜக அலுவலகத்துக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி போராட்டம் நடைபெற்று வருகின்றது... மேலும் பார்க்க

அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்: ஒடிசா அரசு

ஒடிசாவில் வரவிருக்கும் பண்டிகைகளை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே மாத சம்பளம் வழங்குமாறு ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அரசு ஊழியர்களுக்கு வழக்கமாக மாத இறு... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களவை இடைத்தேர்தல் அறிவிப்பு!

ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் காலியாகவுள்ள 5 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்துள்ளது.வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதி வேட்புமனுத் த... மேலும் பார்க்க

ஆன்லைன் சூதாட்டம்: 3 மாநிலங்களைச் சேர்ந்த 8 பேர் கைது; தெலங்கானா சிஐடி அதிரடி!

இணைய செயலி மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 8 ஆப்ரேட்டர்களை தெலங்கானா குற்றப் புலனாய்வுத் துறை(சிஐடி) அதிகாரிகள் கைது செய்தனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு இளைஞர்கள் அடிமையா... மேலும் பார்க்க

கர்நாடக எம்.பி.யின் மனைவியிடம் ரூ. 14 லட்சம் மோசடி! பணத்தை மீட்ட அதிகாரிகள்! எப்படி?

பெங்களூரில் கர்நாடக எம்.பி.யின் மனைவியிடம் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மூலமாக ரூ. 14 லட்சம் மோசடி நடந்துள்ளது. விரைந்து புகார் அளித்ததன்பேரில் அவரது பணம் மீட்கப்பட்டுள்ளது. ஆன்லைன் பண மோசடிகள் நாளுக்கு நாள் அ... மேலும் பார்க்க

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனம் தளர வேண்டாம்: அஜித் பவார்!

மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் பயிர் இழப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு உடனடி உதவியை உறுதி செய்ய நிர்வாகத்திற்கு அந்த மாநில துணை முதல்வர் அஜித் பவார் உத்தரவிட்டார். சோலப்பூர் மாவட்டத்தின... மேலும் பார்க்க